Skip to main content

பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து! எரிந்து கருகிய 80 கோடி... ?

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

தேனி அருகே உள்ள தனியார் மசாலா கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது. 

 

theni masala factory fire accident

 

 

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியில் ஈஸ்டன் தனியார் மசாலா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை கேரளாவைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் நடத்தி வருகிறார். இங்கு தேனி, போடி, கோடாங்கிபட்டி, பிசிபட்டி, வீரபாண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இந்த ஈஸ்டன் மசாலா கம்பெனியிலிருந்து தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள் பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென கம்பெனியின் பின்பகுதியிலிருந்து புகை மூட்டம் வருவதை கவனித்த ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஒரு பகுதியில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதைக்கண்டு ஊழியர்கள் பதறி அடித்து வெளியே வந்தனர். இதுகுறித்து, தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. உடனே தீயணைப்புத்துறையினர் நான்கு வாகனங்களில் இந்த மசாலா கம்பெனிக்கு வந்து தீப்பிடித்த பகுதிகளில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பரவ தொடங்கியது. இதனால் தீயை அணைக்க 

தீயணைப்புத்துறையினரால் முடியாததால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலிருந்தும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக  காட்சியளித்தது. காலை 8 மணிக்கு பிடித்த தீயை தொடர்ந்து 5மணி நேரம் வரை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். இந்த விபத்தில் நிறுவனத்தில் இருந்த மிளகாய், மல்லி, சீரகம், சோம்பு, பட்டை, கிராம், மிளகு  உட்பட சில மசாலா பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இதனுடைய மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் இருக்கும் என ஊழியர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து 
பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

காலையில் புகைமூட்டத்தின் மூலம் தீ பரவியதை கண்டதால் கம்பெனியில் வேலைபார்த்து கொண்டிருந்த ஒட்டுமொத்த தொழிலாளர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இச்சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அதோடு இந்த மசாலா நிறுவனத்தில் தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து தேனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.