Skip to main content

அரசு மருத்துவ கல்லூரியில் நர்சிங் படிக்கும் மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

தேனி மாவட்டத்தில் உள்ள தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் நர்சிங் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி திவ்யா கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி எஸ்.பி வடிவேல் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். இவரின் மகள் திவ்யா தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார்.

theni govt medical college and hospital nursing student incident in hostel

இந்நிலையில் தான் நேற்று (12/02/2020) இரவு பணி முடித்துவிட்டு விடுதிக்கு வந்த மாணவி திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மற்ற மாணவிகள் இரவு பணியை முடித்துவிட்டு விடுதிக்கு சென்று கதவைத் தட்டும் பொழுது கதவு திறக்கப்படாததால் மாணவிகள் பதறி அடித்துக் கொண்டு ஓடி விடுதி காப்பாளரிடம் கூறியுள்ளனர்.


இதையடுத்து விடுதி காப்பாளர் கதவை தட்டியுள்ளார் கதவு திறக்கப்படாததால் காவல் துறையினருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த  காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது திவ்யா ரூமில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

இது பற்றி திவ்யாவுடன் இருந்த சக மாணவிகளிடம் கேட்டபோது, "அவருடைய பெரியப்பா இறந்ததால் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்." இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தனது பெரியப்பா இறந்துபோன மன உளைச்சலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் க.விலக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாணவிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.