Skip to main content

" தேனியில் தொடரும் காட்டுத் தீ " அச்சத்தில் தேனி மக்கள்.

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் முற்றிலும் சூழ்ந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கண் கவர் மாவட்டம் தான் தேனி, எங்கு பார்த்தாலும் மனதை கொள்ளை கொள்ளும் பச்சை பசேல் என்று இருக்கும். மாவட்டத்தில் வயல் வெளிகளும், மாவட்டத்தைச் சுற்றி மலைகளும் மிக அழகாக அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்த தேனி மாவட்டத்தை தனி மாவட்டமாக அரசாணை எண் 679-இல் படி 25.7.1996 அன்று ஆணை பிறப்பித்து 01.01.1997 அன்று முறையாக தேனி மாவட்டம் உருவானது. இந்த மாவட்டத்தின் முதல் ஆட்சியாளர் என்ற பெருமையை திரு.கே.சத்திய கோபால் அவர்கள் பெற்றுள்ளார். இந்த மாவட்டத்தின் முக்கிய தொழில் விவசாயம் தான்.

 

forest



தமிழ்நாட்டில் விவசாயத்தில் தஞ்சைக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் விளங்குகிறது. முக்கிய பயிர்களாக நெல், வெற்றிலை, கரும்பு, வாழை, நிலக்கடலை ஆகியவை பயிரிடப்படுகின்றனர். மேலும் மலைப்பகுதியில் தோட்டப்பயிர்களாக தேயிலை,திராட்சை,காபி, ஏலக்காய் போன்றவைகளும் பயிரிடப்படுகின்றனர். இயற்கை முறையில் ஆறுகளை மையமாக கொண்டு மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

   1) பெரியாறு நீர் மின்சக்தி நிலையம்
   2)சுருளியாறு நீர் மின்சக்தி நிலையம் 
   3)வைகை நுண் புனல் மின் நிலையம் 

இவை தவிர தேனி, ஆண்டிபட்டி,கண்டமனூர்,போடி ஆகிய பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் காற்றை பயன்படுத்தி காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. கடந்தாண்டு 2018, மார்ச் 11-ம் தேதி தேனியில் போடி அருகேயுள்ள குரங்கணி தெற்கு பீட் வனப்பகுதியில் கொழுக்கு மலை அருகே ஒத்தைமரம் பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கிய மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் உயிரழந்த சம்பவம் தழிழகத்தையே திரும்பிப் பார்க்க செய்தது. 

 

fire accident


 

forest fire



இதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக போடி மலைப்பகுதியில் மற்றும் கொடைக்கானல் மலைச் சாயல் அருகில் உள்ள முருகமலையில் இரண்டிலிருந்து மூன்று மணிநேரத்திற்கும் மேலாக காட்டுத்தி ஏற்பட்டது.இத்தீ குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே அடிக்கடி தொடர்ந்து ஏற்படுகின்றன. இதற்கு அப்பகுதியில் உள்ள சில சமூக விரோதிகளே காரணமாக உள்ளனர். குறிப்பாக மாலைப் பொழுதில் ஒரு சிலர் மறைமுகமாக மலைப்பகுதிக்குச் சென்று தீயை மூட்டுகின்றனர்.இதனால் அப்பகுதியில் இயற்கை வளங்கள் மற்றும் மிக நீண்ட நாட்களாக வளர்ந்து வந்த மரங்களும் அழிந்துவிடுகின்றன. இதனை வனத்துறையினரும், காவல்த்துறையினரும் கண்டுக்கொள்வதில்லை. இச்செயல் மேலும் தொடருமேயானால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து இயற்கை வளங்களும் அழிந்து விடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற அச்சத்தில் தேனி மாவட்ட மக்கள் உள்ளனர். 


பா.விக்னேஷ் பெருமாள்

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.