வேன் கவிழ்ந்து விபத்து... 3 பேர் பலி!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் உரமூட்டைகளை ஏற்றி வந்து கொண்டிருந்த வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தொழிலாளர்களான மணி, முத்துப்பாண்டி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

theni district thaneerpanthal incident govt hospital admit and police

விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்த 7 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

govt hospital incident police Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe