Skip to main content

வேன் கவிழ்ந்து விபத்து... 3 பேர் பலி!

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் உரமூட்டைகளை ஏற்றி வந்து கொண்டிருந்த வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தொழிலாளர்களான மணி, முத்துப்பாண்டி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

theni district thaneerpanthal incident govt hospital admit and police


விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்த 7 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்