Skip to main content

நீட் தேர்வில் இந்திய அளவில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பிடித்த ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகன்!

Published on 18/10/2020 | Edited on 18/10/2020

 

 

theni district periyakulam neet exam jeevith kumar

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி- மகேஸ்வரி தம்பதியரின் மூத்த மகனாக பிறந்தவர் ஜீவித்குமார். இவருக்கு ஷர்மிளாதேவி என்ற சகோதரியும், தீபன் என்ற சகோதரனும் உள்ளனர்.

 

பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஜீவித்குமார் 12- ஆம் வகுப்பு பயின்று நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றார். இவர் கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வை எழுதி உள்ளார். நீட் தேர்வு முடிவில் 198 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.

 

இருப்பினும் இரண்டாவது முறையாக நீட் தேர்வை மாணவர் ஜீவித்குமார் எழுதி வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய ஆசிரியர் சபரிமாலா உள்ளிட்டோர் நாமக்கலில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவரை சேர்த்தனர். அங்கு மாணவர் நன்கு பயின்றார். அதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நீட் தேர்வில் பங்கேற்று மாணவர் ஜீவித்குமார் தேர்வு எழுதினார்.

 

theni district periyakulam neet exam jeevith kumar

 

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (16/10/2020) மாலை தேசிய தேர்வு முகமை (National Testing Agency) இணையதளத்தில் வெளியானது. இதில் மாணவர் ஜீவித்குமார் 720- க்கு 664 மதிப்பெண்களைப் பெற்று இந்திய அளவில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதல் மாணவனாகவும், இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் 1823- வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

ஒரு சிறு கிராமத்தில் பிறந்து இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து, இந்திய அளவில் அரசுப் பள்ளிகளில் முதல் மாணவனாக வந்த ஜீவித்குமாரை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள். பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றன.

 

theni district periyakulam neet exam jeevith kumar

 

மாணவரின் தந்தை நாராயணமூர்த்தி ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி, தாய் மகேஸ்வரி தையல் தொழில் செய்து வருகிறார். சகோதரி ஷர்மிளா தேவி பி.எஸ்.சி. கணிதம் பாடப் பிரிவில் பட்டப்படிப்பை படித்து வருகின்றார். அதேபோல், மாணவர் ஜீவித்குமாரின் சகோதரர் தீபன் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலேயே 10- ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இப்படி ஏழை குடும்பத்தில் பிறந்து நீட் தேர்வில் சாதித்த மாணவர் ஜீவித்குமார், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.