Skip to main content

ஆட்டோவைப் பறிமுதல் செய்த போலீசார்! நடந்தே வீடு திரும்பிய கர்ப்பிணிப் பெண்கள்!

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது. இதில் அத்தியாவசியப் பணிகள் தவிர மற்ற நேரங்களில் வெளியில் வரக்கூடாது என்று அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சூழலில் பல்வேறு பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனை செல்வதற்குக் காவல் துறையினர் தங்கள் சொந்த வாகனம் மற்றும் வாடகை வாகனம் மூலம் உதவி செய்து வருகின்றனர். 
 

 

 

auto -


அப்படி இருக்கையில் தேனி மாவட்டம் போடியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது தாயாருடன் சென்ற ஆட்டோவை வழிமறித்து, அவர்களை கீழே இறக்கி விட்டதோடு அவர்கள் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார். அந்தக் கர்ப்பிணிப் பெண்ணான கார்த்திகாவையும், அவரது தாயாரையும் நடந்தே மருத்துவமனைக்குச் செல்ல வைத்த அவலம் நடந்தேறி உள்ளது. 
 

இப்படி மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் துறை நிர்வாகம் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் மற்றும் அவர்கள் மன ரீதியாக மருத்துவ ஆலோசானை பெற்று பணிக்கு வர வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
 

இதேபோல் போடி சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அபர்ணா, நிறைமாதக் கர்ப்பிணியாக உள்ளார். இவர் அவ்வப்போது போடி அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஒரு ஆட்டோவை அழைத்து அவர் மற்றும் தனது தாயுடன் பரிசோதனை செய்வதற்காகப் போடி அரசு மருத்துவ மருத்துவமனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 
 

 

http://onelink.to/nknapp

 

இவர்கள் சென்ற ஆட்டோ, போடி மார்க்கெட் பகுதியில் வந்தபோது அங்குக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆட்டோ டிரைவரிடம் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஆட்டோவைப் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அதில் வந்த கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது தாயாரையும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாகப் போலீசார் கூறினார்கள். 
 

அதற்காக அவர்கள் காத்திருந்தனர். ஆனால் இரண்டு மணி நேரமாகியும் அவர்கள் அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் அவருடைய தாயாரும் தாங்கள் நின்றிருந்த பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் போடி அரசு மருத்துவமனைக்கு நடந்தே சென்றனர்.
 

பின்னர் மருத்துவமனை சோதனைப் பரிசோதனை முடித்து அவரும் அவரது தாயாரும் நடந்தே அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றனர். இப்படிக் கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சைக்காக ஆட்டோவில் சென்றவர்களைப் போலீசார் தடுத்து நடக்கவிட்ட சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.