Advertisment

"அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமருவதே இலக்கு"- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

THENI DISTRICT ADMK LEADERS DEPUTY CM SPEECH

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், "2021-ல் அ.தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும். அ.தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க களப்பணி ஆற்ற வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக அமையும். எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும்; எடுத்து வைக்கும் அடியும் தூய்மையாக இருக்க வேண்டும். தொண்டர்கள் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நான் எண்ணியதே இல்லை. கட்சிக்கு மட்டுமே தொண்டர்கள், நிர்வாகிகள் விசுவாசமாக இருக்க வேண்டும்". இவ்வாறு துணை முதல்வர் பேசினார்.

Advertisment

Theni Speech DEPUTY CM PANEER SELVAM Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe