Advertisment

தேனி மாவட்டத்தில் இன்று புதிதாக 77 பேருக்கு கரோனா தொற்று!

hgf

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் நேற்று மட்டும் 3,827 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் 1,747 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மூன்றாவது நாளாக 2 ஆயிரத்திற்குக் குறைவாக கரோனா பாதிப்பு பதிவானது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் 4 ஆயிரத்தை கடந்து வந்த கரோனா பாதிப்பு முதல் முறையாக நேற்று குறைந்தது. அதைபோல தென் தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தேனியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக அதிகரித்து வருகின்றது. இன்று மட்டும் இதுவரை 77 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1205 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe