Skip to main content

இந்தியா சார்பில் விண்வெளி செல்ல வேண்டும்! தேனி வீராங்கனையின் லட்சியம்!!

Published on 06/09/2019 | Edited on 06/09/2019



போலந்து நாட்டில் இரண்டு மாதம் தங்கி விண்வெளி சிறப்பு பயிற்சி முடித்து சான்றிதழுடன் தேனி திரும்பிய  வீராங்கனை உதய கீர்த்திகாவோ இந்தியா சார்பில் விண்வெளி செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்து வருகிறார்.

 

u


துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள தேனி அல்லிநகரத்தில் வசித்து வரும் சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான தாமோதரன் அமுதா தம்பதியின் மகளான உதயகீர்த்திகா தேனியில் உள்ள  பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் பள்ளியில் தமிழ் வழியில் பிளஸ் டூ வரை படித்தார்.

 

u


அதன்பின் உக்ரைன் தேசிய இராணுவ விண்வெளி ஆராய்ச்சி பல்கலைகழகத்தில்  ஏர் கிராப்ட் மெயிட்டனென்ஸ் படிப்பை முடித்து கடந்த ஜனவரியில் இறுதியில் இந்தியா திரும்பினார். அதன் பின்  மீண்டும் ஜூலை முதல் வாரத்தில் விண்வெளி வீரர்களுக்கான சிறப்பு பயிற்சி பெற போலந்து நாட்டுக்கு சென்றார். அங்குள்ள அனலாக் விண்வெளி மையத்தில் இரண்டு மாதங்களாக பயிற்சி பெற்றவர்  கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி திரும்பினார். 

 

u


     
 இது பற்றி வின்வெளி வீரர்களுக்கான சிறப்பு பயிற்சி பெற போலந்து நாட்டுக்கு சென்று திரும்பிய
வீராங்கனை உதயகீர்த்திகாவிடம் கேட்டபோது....குழந்தைகளாக இருக்கும் போது பெற்றோர்கள் நிலாவை பார்த்து பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டுவார்கள்.  அதுபோல்தான் நான் மூன்று வயது குழந்தையாக இருக்கும்  போது என் அப்பா அம்மா நிலாவை பார்த்து சாப்பாடு ஊட்டும் போது நான் நிலாவுக்கு போக வேண்டுமென்று அடம்பிடித்து இருக்கிறேன்.  அப்பொழுது என் அப்பா அதற்கு ராக்கெட்டில் தான் போக முடியும்  சாப்பிடுமா என்று கூறியும் கூட,  தொடர்ந்து நான் அடம்பிடிப்பது கண்டு ராக்கெட்  டிரைவர் லீவு போட்டு இருக்கிறார்.   வந்த பிறகு ராக்கெட்டில் போய் நிலாவைப் பார்க்கலாம் என்று கூறியே சாப்பாடு விட்டிருக்கிறார்.  அதிலிருந்து எனக்கு ராக்கெட்டில் போய் நிலாவை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது.  அதன் எதிரொலியாகத் தான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே விண்வெளி சம்பந்தமான புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினேன்.

 

u

 

எனது ஆர்வத்தை கண்டு எனது அப்பாவும்  மதுரையில் உள்ள தான அறக் கட்டளையில் வேலை பார்த்து வந்ததால் அடிக்கடி எனக்கு விண்வெளி சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கி கொடுப்பார். இந்த நிலையில்தான் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது திருநெல்வேலியில் உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம் மூலம் இஸ்ரோ ஒரு கட்டுரைப் போட்டி நடத்தியது.  அதாவது "பூமியை பாதுகாப்பதில்  விண்வெளி ஆய்வில் பங்கு" என்ற தலைப்பில் கொடுத்திருந்தனர் .

 

u

 

அந்தக் கட்டுரைப் போட்டிக்கு இரவு பகல் பாராமல் படித்து படங்கள் மற்றும் நீர்நிலை காடுகளை பற்றி கட்டுரைகளை எழுதி அனுப்பி இருந்தேன் .  அடுத்த சில நாட்களிலேயே இஸ்ரோவிலிருந்து எங்களுக்கு போன் வந்தது.  நான் கலந்து கொண்ட கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதாக அறிவித்தனர்.  அதுவும் மாநில அளவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதில்  எனக்கு முதல் பரிசு கிடைத்ததை கண்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.   அதுபோல் என் அப்பா அம்மாவும் (தாமோதரன், அமுதா) மிகுந்த மகிழ்ச்சி   அடைந்தனர்.  அதன்பின் இஸ்ரோவில் நான் பரிசு வாங்க சென்றபோது அங்குள்ள சில விஞ்ஞானிகளும் என்னை பாராட்டினார்கள்.   அதைத் தொடர்ந்து மாநில அளவில் பல பரிசுகளை பெற்றேன் அதன்பின் 2014 பிளஸ் டூ படிப்பை முடித்தபோது "வழிநடத்தும் விண்வெளி என்ற தலைப்பில்" இஸ்ரோ மூலம் ஒரு கட்டுரை போட்டி மாநில அளவில் நடந்தது.  அதுலயும் நான் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றேன்.  அதன் பிறகு தான் "உக்ரையன் நாட்டில் ஏர்கிராப்ட் மெயிட் டென்ஸ் "படிக்க சீட் கிடைத்தது. 

 

u

 

அந்த படிப்பு  நான்கு  வருட படிப்பு என்பதால் பல லட்சம் செலவாகும் என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு எங்களிடம் வசதியும் இல்லை.  அப்படி இருந்தும் கூட எனது அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு முக்கிய பிரமுகர்கள் மற்றும்  எங்க எம்.பி. அண்ணன் ரவீந்திர நாத்குமார் மற்றும்  லயன்ஸ் ரோட்டரி தேனியில் உள்ள சின்ன அறக்கட்டளை மற்றும் மின்வாரிய ஊழியர் சங்கங்கள் இப்படி பலர் உதவி செய்ததின்  பேரில் தான் "உக்ரைன் தேசிய ராணுவ வின்வெளி ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில்" சேர்ந்து படிப்பை முடித்து  வந்தேன்.  அதன் பின்தான் வின்வெளி வீரர்களுக்கான சிறப்பு பயிற்சி பெற போலந்து நாட்டுக்கு சென்று அங்குள்ள "அனலாக் விண்வெளி மையத்தில்"இரண்டு மாதங்கள் பயிற்சி பெற்றேன் அந்த பயிற்சின்  போது சந்திரனில் தனியாக இருந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வகையில் "லுரனார்  மிஷின்" என்ற பயிற்சியும் அதன்பின் செவ்வாய்க்கிரகத்தில் உள்ளது போன்ற சூழலில் "மார்ச் மிஷின் "என்ற பயிற்சியும் 16 நாட்கள் நடந்தது. 

 

u

 

 அதன்பின்  ராக்கெட்டில் இருந்து இறங்கிய பிறகு வேற்று கிரகங்களில் தற்காத்துக் கொள்வதற்கான சிறப்பு "துப்பாக்கி சுடும் பயிற்சி" அளிக்கப்பட்டது.  அதன்பின் ஆக்சிஜனை சுவாசித்து ஆழ்கடலில் நீந்துகின்ற "ஸ்கூபா டைவிங் பயிற்சி" தரையிறங்கும் போது தேவைப்படும் பாராசூட் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.  இதில் முக்கியமாக வினாடிக்கு எட்டு கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ராக்கெட்டில் பயணிக்கிற "சென்ட்ரிக் பியூஜ்"என்ற பயிற்சியும்  கவனமாக கொடுத்தனர்.  அதன்பின் ராக்கெட் வான்நோக்கி முன்னே செல்கையில் உடலியல் மாற்றங்கள் ஏற்படும்.

 

  அதனை எதிர் நோக்கும்  "ஹைபோ பேரிக்சேம்பர்" என்ற பயிற்சி முடித்தால் தான் விண்வெளி வீராங்கனைக்கான சான்றிதழ் வழங்கப்படும் ஏனென்றால், ""இந்த பயிற்சியில் இதயம் மூளை செயல்பாடுகள் நின்று போவதற்கும் இரண்டு செவிகளும் கேட்கும் திறனை இழப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு" அதனை யும் வெற்றிகரமாக முடித்து "விண்வெளி வீராங்கனை காண சான்றிதழ் பெற்றேன்" இப்பயிற்சிகள் போலந்தில் உள்ள பிலால். கிரிக்கெட். வாட்ஸ்ஷன். ஆல்ஸ்டின் நகரங்களில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.   அதன்பிறகு தான் ஊருக்கு வந்து இருக்கிறேன்.  அதோடு செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பும் ""ககன்யான்"" திட்டத்தில் என்னையும் இணைக்க விரைவில் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் விண்ணப்பிக்க இருக்கிறேன்.  அதன் மூலம்  இந்தியா வின்வெளி ஆய்வு மையம்மான இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்பது தான் எனது லட்சியம்  என்று கூறினார். 

 
ஆக இஸ்ரோ வின்வெளி ஆய்வு மையம்  மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் வரும் 2021ல் செயல்படுத்த இருக்கிறது. அதில் நான்கு பேர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து இருக்கிறது என்பதால் "இஸ்ரோ வின்வெளி ஆய்வு மையத்தில் உதயகீர்த்திகாவும்  இடம் பெற்று அதன் மூலம் விண்வெளிக்கு செல்ல வேண்டும்"என வாழ்த்துவோம்.

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.