Skip to main content

வேப்பூர் பகுதியை கலக்கி வந்த திருட்டு கும்பலின் தலைவன் கைது! 

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் மற்றும் வேப்பூர் காவல்நிலைய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

வேப்பூரில் ஐந்து வீடுகளில் கொள்ளை, களத்தூர் கிராமத்தில் இரு வீடுகளில் கொள்ளை என

அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறின. கடந்த 21-ஆம் தேதி இரவு நல்லூர் அக்ரஹார தெருவில் ஆசிரியை தேன்மொழியின் வீட்டு பின்பக்க கதவு வழியாக வீட்டினுள்ள புகுந்த கொள்ளையர்கள் அவரது  10 பவுன் தாலிச்செயினை  பறித்து சென்றனர்.
 

 Theft in Vepur.. people report at police station

 

இந்த சம்பவங்களின் அடிப்படையில் தொடர் திருட்டுகளில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிநவ்ஸ்ரீ உத்தரவின்பேரில், திட்டக்குடி டி.எஸ்.பி வெங்கடேசன் மேற்பார்வையில், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அதையடுத்து இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய ஐவதுகுடி சமத்துவபுரத்தில் வசித்து வந்த மாரிமுத்து மகன் சுப்பிரமணியன்(48) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
 

விசாரணையில் சுப்பிரமணியன்,  கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் தனது மைத்துனரான சஞ்சய்காந்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து நல்லூர் தேன்மொழி,  சேப்பாக்கம் செல்வி,  கீழ்ஒரத்தூர் சந்தியா, நாரையூர் ரவிச்சந்திரன், கொத்தனூர் ரவிச்சந்திரன், ஆதியூர் தீபிகா, எ.கொளத்தூர் கோவிந்தராஜ் மற்றும் எழிலரசி உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் திருடியதை ஒப்புக்கொண்டார்.  

மேலும் விசாரணையின் போது சுப்பரமணியன், ஒரு ஊருக்கு திருட செல்வதற்கு முன்பாக பகல் நேரங்களில் காய்கறிகள்,  பாத்திரங்கள் விற்பது போல சென்று வீடுகளை நோட்டமிட்டு பின்னர் இரவு நேரங்களில் திருடியதாக கூறியுள்ளார். கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த சுப்பிரமணியத்திடம் இருந்து 84 கிராம் தங்கம் கால் கிலோ வெள்ளி கொலுசுகள் திருடுவதற்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நகைகளை எங்கெங்கு கொடுத்துள்ளார் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். அவரது கூட்டாளியான மணிகண்டன் மற்றும் சஞ்சய் காந்தியும் தேடிவருகின்றனர். 

 

 Theft in Vepur.. people report at police station

 

அதேசமயம் வேப்பூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி ஐந்து வீடுகளில் சுமார் 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவற்றை கொள்ளையடித்த கும்பலை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை தற்போது பிடிபட்டுள்ள கும்பலுக்கும் மேற்கண்ட கொள்ளை சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என தெரியவில்லை. அந்த கொள்ளைகள் குறித்து விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே சுப்பரமணியன் மற்றும் கூட்டாளிகள் மீதான திருட்டு  வழக்குகள் பொய்யானவை என  சுப்பரமணயனின் மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.