Skip to main content

வேப்பூர் பகுதியை கலக்கி வந்த திருட்டு கும்பலின் தலைவன் கைது! 

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் மற்றும் வேப்பூர் காவல்நிலைய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

வேப்பூரில் ஐந்து வீடுகளில் கொள்ளை, களத்தூர் கிராமத்தில் இரு வீடுகளில் கொள்ளை என

அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறின. கடந்த 21-ஆம் தேதி இரவு நல்லூர் அக்ரஹார தெருவில் ஆசிரியை தேன்மொழியின் வீட்டு பின்பக்க கதவு வழியாக வீட்டினுள்ள புகுந்த கொள்ளையர்கள் அவரது  10 பவுன் தாலிச்செயினை  பறித்து சென்றனர்.
 

 Theft in Vepur.. people report at police station

 

இந்த சம்பவங்களின் அடிப்படையில் தொடர் திருட்டுகளில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிநவ்ஸ்ரீ உத்தரவின்பேரில், திட்டக்குடி டி.எஸ்.பி வெங்கடேசன் மேற்பார்வையில், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அதையடுத்து இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய ஐவதுகுடி சமத்துவபுரத்தில் வசித்து வந்த மாரிமுத்து மகன் சுப்பிரமணியன்(48) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
 

விசாரணையில் சுப்பிரமணியன்,  கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் தனது மைத்துனரான சஞ்சய்காந்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து நல்லூர் தேன்மொழி,  சேப்பாக்கம் செல்வி,  கீழ்ஒரத்தூர் சந்தியா, நாரையூர் ரவிச்சந்திரன், கொத்தனூர் ரவிச்சந்திரன், ஆதியூர் தீபிகா, எ.கொளத்தூர் கோவிந்தராஜ் மற்றும் எழிலரசி உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் திருடியதை ஒப்புக்கொண்டார்.  

மேலும் விசாரணையின் போது சுப்பரமணியன், ஒரு ஊருக்கு திருட செல்வதற்கு முன்பாக பகல் நேரங்களில் காய்கறிகள்,  பாத்திரங்கள் விற்பது போல சென்று வீடுகளை நோட்டமிட்டு பின்னர் இரவு நேரங்களில் திருடியதாக கூறியுள்ளார். கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த சுப்பிரமணியத்திடம் இருந்து 84 கிராம் தங்கம் கால் கிலோ வெள்ளி கொலுசுகள் திருடுவதற்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நகைகளை எங்கெங்கு கொடுத்துள்ளார் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். அவரது கூட்டாளியான மணிகண்டன் மற்றும் சஞ்சய் காந்தியும் தேடிவருகின்றனர். 

 

 Theft in Vepur.. people report at police station

 

அதேசமயம் வேப்பூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி ஐந்து வீடுகளில் சுமார் 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவற்றை கொள்ளையடித்த கும்பலை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை தற்போது பிடிபட்டுள்ள கும்பலுக்கும் மேற்கண்ட கொள்ளை சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என தெரியவில்லை. அந்த கொள்ளைகள் குறித்து விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே சுப்பரமணியன் மற்றும் கூட்டாளிகள் மீதான திருட்டு  வழக்குகள் பொய்யானவை என  சுப்பரமணயனின் மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.