Skip to main content

டாஸ்மாக் கடையில் திருட்டு...!

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

Theft in tasmac shop

 

விருத்தாச்சலம் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள  மதுபானங்கள் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அரசு மதுபானக்கடை. பொது முடக்கத்தால் சனிக்கிழமை மாலையே டாஸ்மாக் ஊழியர்கள் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றனர். மீண்டும் இன்று காலை கடையைத் திறக்க வரும்போது கதவு உடைக்கப்பட்டு 1056 பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. 

 

 

மேலும் கடையில் இருந்த 10,000 ரூபாய் சில்லறை காசுகளையும் திருடிச் சென்றுள்ளனர்

திருடிச் சென்ற மது பாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் என மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

 

  

சார்ந்த செய்திகள்