Skip to main content

குளிர்பான நிறுவனத்தில் திருட்டு! 

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

Theft at the soft drinks company!

 

திருச்சி மாவட்டம், உறையூர் ராமலிங்கம் நகர் 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). இவர், குண்டூர் பகுதியில் ஜே.ஜே. ஏஜென்சி என்ற பெயரில் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். நேற்று காலை அந்நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றும் சரவணன் என்பவர் நிறுவனத்தை திறப்பதற்காக வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே மர்ம நபர்கள் நுழைந்து திருடி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக இது குறித்து நிறுவன உரிமையாளருக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்படி அங்கு வந்த சுரேஷ், நவல்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அந்தத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்ட போது நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரத்து 350 ரூபாய் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து உள்ளே நுழைந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்