Skip to main content

அன்பளிப்புகளை சுருட்டிய ஆசாமி... கள ஆய்வில் காவல்துறையினர்!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

theft in reception, Police in field inspection
                                                             மாதிரி படம்

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது திருச்சிற்றம்பலம் கூட்ரோடு. இங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் (16.11.2021) மாலை 6 மணி அளவில் புதுச்சேரி மாநிலம் சேதாரப்பட்டு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் - ஹேமலதா ஆகியோரது  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வருகை தந்தனர். அவர்கள் தம்பதியருக்கு நகை, பணம் என அன்பளிப்புகளை வழங்கியுள்ளனர். அவற்றை மணமக்களின் நெருங்கிய உறவினர் செல்வகுமார் என்பவர் ஜவுளிக்கடையில் கொடுக்கப்படும் கட்டப்பை ஒன்றில் சேகரித்துவைத்திருந்துள்ளார்.

 

மணமக்களுக்கு நெருங்கிய உறவினர் என்பதால் செல்வகுமாரை மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு அழைத்தனர். அப்போது செல்வகுமார் தன்னிடமிருந்த அன்பளிப்பு பணம், நகை அடங்கிய பையை அருகில் வைத்துவிட்டு மணமக்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்தவர், பிறகு அன்பளிப்பு பையை வைத்த இடத்தில் பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. அந்தப் பை திருடுபோனது கண்டு செல்வகுமார் உட்பட அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டனர். இதுகுறித்து செல்வகுமார் அருகில் உள்ள ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் பையில் 50 ஆயிரம் பணம், 2 கிராம் எடையுள்ள 5 மோதிரங்கள், 5 தங்க காசுகள் ஆகியவை இருந்துள்ளன.

 

இதையடுத்து, திருமண மண்டபத்தில் அன்பளிப்பு பெறப்பட்ட பணம், நகை ஆகியவை திருடுபோனது குறித்து ஆரோவில் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வழக்குப் பதிவுசெய்தார். மேலும், திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்களைப் படம்பிடித்த வீடியோ காட்சிகள் உள்ளிட்டவைகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அன்பளிப்புப் பணம் வைக்கப்பட்டிருந்த அந்தப் பையைத் திருடிச் சென்றதைக் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் அந்த நபரைப் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கிடைக்கப்பெற்ற அன்பளிப்பு பணம், நகை திருடுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ஒன்றுகூடிய பிரபலங்கள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏ.ஆர் ரஹ்மான், மோகன்லால், சிரஞ்சீவி, ராம் சரண், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, ரன்வீர் சிங், நெல்சன், அனிருத், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.