Skip to main content

கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கை வரிசை! 

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

Theft in nagapattinam temple

 

நாகை அருகே கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கை வரிசை காட்டியுள்ளனர். வலிவலம் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள சாட்டியக்குடியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வேதபுரீஸ்வரசுவாமி கோவில் உள்ளது. ஈரடுக்கு பாதுகாப்பு சுவர் கொண்ட இக்கோவிலினை பணியாளர்கள் வழக்கம் போல நேற்றிரவு பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்தநிலையில், இன்று காலை வழக்கம்போல கோவில் நடை திறக்கப்பட்ட போது கோவிலின் முகப்பு பகுதி பூட்டி இருந்தது. அதேநேரம் கோவிலின் மூலவர் பகுதிக்குச் செல்லும் இரண்டு கதவுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 


உள்ளே சென்று பார்த்தபோது  கோவிலிலுள்ள பித்தளை குடம்-4, பித்தளை சொம்பு -3, தொங்கும் விளக்கு-5, கை மணி-2, அரை அடுக்கு பித்தளை-1, பெரிய குத்துவிளக்கு-1, பித்தளை பூட்டு-3 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி தெரியவந்துள்ளது. 


கோவிலின் முகப்பு கதவு பூட்டி இருந்த நிலையில் மதில் சுவர் ஏறி மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றுள்ளதாக வலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்ப இடத்திற்கு விரைந்த வலிவலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் நாகை கைரேகை நிபுணர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்‌. நேற்று முன்தினம் கொளப்பாடு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் கோவில் ஆலயத்தின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள நிலையில், நேற்று இரவு மீண்டும் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.