Skip to main content

சரக்கு வாகனத்தில் திருட்டு- வேலூர் சாலையை கடக்க பயப்படும் சரக்கு வாகனங்கள். 

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

தேசிய நெடுஞ்சாலையில் பட்ட பகலில் சரக்கு வாகனங்களை திருடுவதும், வாகனங்களில் இருந்து பொருட்களை திருடுவதும் தொடர் கதையாகி வருகிறது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி பார்சல் சர்வீஸ் லாரி ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அதனை குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். நீண்ட தூரம் பயணித்து வந்ததால் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சாலையோரம் கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு சிறிது நேரம் உறங்கிக் கொண்டிருந்தார்.

 

Theft in freight vehicles - Freight vehicles that are afraid to cross the Vellore road.



பிறகு தூங்கி எழுந்தவர், சரக்கு லாரியுடன் மீண்டும் பயணத்தை தொடங்கினார். அதற்கு முன் சரக்கு லாரியின் சக்கரத்தை செக் செய்ய லாரியை சுற்றி வந்து பார்த்துள்ளார். அப்போது, பார்சல் சர்வீஸ் லாரியின் பின்பக்கத்தை பார்த்த குமார், லாரியின் கதவுகள் திறக்கப்பட்டு இருந்ததையும், பார்சல்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 

உடனடியாக இதுப்பற்றி பள்ளிக்கொண்டா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரில் லாரியில் இருந்த பெட்டிகளில் 20 பெட்டிகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதில், விலை உயர்ந்த ஜெர்கின்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் மதிப்புயிருக்கும் எனக்குறிப்பிட்டுதள்ளதாக கூறியுள்ளனர். இந்த புகாரை பெற்ற காவல்துறையினர், இதுக்குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Theft in freight vehicles - Freight vehicles that are afraid to cross the Vellore road.

 

இரண்டு தினங்களுக்கு முன்பு வாலாஜா அடுத்த பூட்டுதாக்கு பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கண்டெய்னர் லாரியை 5 பேர் கொண்ட கும்பல் திருடி சென்றது குறிப்பிடதக்கது. இதனை உடனடியாக காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். சென்னை- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு வாகனங்கள் கடந்து செல்கின்றன என்கிறார்கள் ஓட்டுநர்கள். தற்போது வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சரக்கு வாகனங்கள் கடத்தல், பொருட்கள் திருட்டு போன்ற சம்பவங்கள் நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.