புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆனி, ஆடி மாதங்களில் ஏராளமானவர்கள் அதிகம் பேசும் பிரபலமான வார்த்தை மொய் விருந்து. இந்த மொய் விருந்துகள் அரிசி, ஆட்டுக்கறி, மளிகை பொருள், காய்கறி, இலை, சமையல் கலைஞர்கள், மண்டபங்கள் எனப் பலருக்கான வாழ்வாதாரம். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி, ஆசிரியர், அரசு ஊழியர், அரசியல்வாதி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் நடக்கும் ஒரு கலாச்சார விழாவாக இந்த மொய் விருந்துகள் நடத்தப்படுகிறது. இது தமிழர்களின் வீடுகளில் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் விழா செலவுகளைச் சமாளிக்க உறவினர்கள் தங்களால் இயன்ற தொகையை மொய்யாக எழுதிச் சென்றுள்ளனர். இது தமிழர்களின் மாறாத மரபு. 

ஆனால், தஞ்சாவூர்  மாவட்டம் பேராவூரணி பகுதியில்  கடந்த 35, 40 வருடங்களுக்கு முன்பு சிலர் தனியாக மொய் விருந்து' என்று அழைப்பிதழ் அச்சடித்துக் கொடுத்து விருந்து நடத்தி மொய் வசூல் செய்தனர். அந்தப் பகுதியில் உறவினர்களாக இருந்த புதுக்கோட்டை மாவட்டக் கிராமங்களில் கீரமங்கலம், செரியலூர், வடகாடு, மாங்காடு, அணவயல் உள்படச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும்  அந்தப் பழக்கம் பற்றிக் கொள்ள அதன் பிறகு கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களிலும் மொய் விருந்துகள் தொடங்கியது. இந்த மொய் விருந்துகளால் பலரது பொருளாதாரம் உயர்வுக்கும் வழி வகுக்கிறது. மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் பட்டதாரிகளையும் தொழில்முனைவோர்களையும் உருவாக்கியது.புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடியிலும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஆவணியிலும் மொய் விருந்துகள் நடப்பது வழக்கம். இந்த காலங்களில் மட்டும் இரு மாவட்டங்களிலும் மொய் விருந்துகள் நடத்தும் பகுதிகளில் சுமார் ரூ.500 கோடிகள் வரை புழக்கத்தில் இருந்தது. ஆனால் கஜா புயல், கொரோனா உள்ளிட்ட இயற்கை பாதிப்புகள் மொய் விருந்துகளையும் விட்ட வைக்கவில்லை. 

இதனால் சில ஆண்டுகள் தேக்கம் ஏற்பட்டு பருவம் தப்பிய மொய் விருந்துகள் நடத்தப்பட்டது. அதனால் வழக்கமாக ஆடியில் தொடங்கும் மொய் விருந்துகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆனி மாதத்திலேயே கீரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தொடங்கிவிட்டது. டன் கணக்கில் ஆட்டுக்கறி, குவியல் குவியலாக சோறு, தலைவாழை இலையில் ஆப்பைக்கறி பரிமாறும் போது வரும் கமகம கறிக்குழம்பு வாசனை பலரையும் பந்திக்கு இழுத்து வருகிறது. ஆனால் கஜா புயலுக்கு பிறகு எதிர்பார்த்த அளவு மொய் வசூல் இல்லை. புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு, அணவயல், மேற்பனைக்காடு என சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆடியில் தொடங்கி கடைசி தேதி வரை சுமார் 500 முதல் ஆயிரம் பேர்கள் வரை கூட்டாக மொய் விருந்து வைத்து கோடிக்கணக்கில் மொய் வசூல் செய்த மகிழ்ச்சியான காலத்தை கஜா புயலும், கொரோனாவும் புரட்டிப் போட்டுவிட்டது. அதன் பிறகு போட்ட மொய்யாவது வந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். 

இந்த ஆண்டும் ஆடி மாதம் தொடங்க வேண்டிய மொய் விருந்து ஒரு மாதம் முன்னதாக ஆனி மாதமே தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் முதல் மொய் விருந்து கீரமங்கலத்தில் நடந்தது. இதனையடுத்து ஆனி, ஆடி இரு மாதங்களும் கீலமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மொய் விருந்துகள் நடக்கும் என்கின்றனர். மொய் என்பது தமிழர்களின் காலம் காலமான பழக்கவழக்கம். இதனை எந்தக் காலத்திலும் நிறுத்த முடியாது. இயற்கையின் மாற்றங்களால் வருவாய் குறையலாம் சில வருடங்கள் வசூல் கொஞ்சம் தேங்கியது. ஆனால் விருந்துகள் தேங்கவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மொய் விருந்துகளின் எண்ணிக்கை குறைலாம் ஆனால் மொய் என்ற பழக்கம் என்றும் தொடரும் என்கிறார்கள். 

Advertisment

இதனால் சில ஆண்டுகள் தேக்கம் ஏற்பட்டு பருவம் தப்பிய மொய் விருந்துகள் நடத்தப்பட்டது. அதனால் வழக்கமாக ஆடியில் தொடங்கும் மொய் விருந்துகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆனி மாதத்திலேயே கீரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தொடங்கிவிட்டது. டன் கணக்கில் ஆட்டுக்கறி, குவியல் குவியலாகச் சோறு, தலைவாழை இலையில் ஆப்பைக்கறி பரிமாறும் போது வரும் கமகம கறிக்குழம்பு வாசனை பலரையும் பந்திக்கு இழுத்து வருகிறது. ஆனால் கஜா புயலுக்குப் பிறகு எதிர்பார்த்த அளவு மொய் வசூல் இல்லை. புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு, அணவயல், மேற்பனைக்காடு எனச் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆடியில் தொடங்கி கடைசி தேதி வரை சுமார் 500 முதல் ஆயிரம் பேர்கள் வரை கூட்டாக மொய் விருந்து வைத்து கோடிக்கணக்கில் மொய் வசூல் செய்த மகிழ்ச்சியான காலத்தை கஜா புயலும், கொரோனாவும் புரட்டிப் போட்டுவிட்டது. அதன் பிறகு போட்ட மொய்யாவது வந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். 

இந்த ஆண்டும் ஆடி மாதம் தொடங்க வேண்டிய மொய் விருந்து ஒரு மாதம் முன்னதாக ஆனி மாதமே தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் முதல் மொய் விருந்து கீரமங்கலத்தில் நடந்தது. இதனையடுத்து ஆனி, ஆடி இரு மாதங்களும் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மொய் விருந்துகள் நடக்கும் என்கின்றனர். மொய் என்பது தமிழர்களின் காலம் காலமான பழக்கவழக்கம். இதனை எந்தக் காலத்திலும் நிறுத்த முடியாது. இயற்கையின் மாற்றங்களால் வருவாய் குறையலாம் சில வருடங்கள் வசூல் கொஞ்சம் தேங்கியது. ஆனால் விருந்துகள் தேங்கவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மொய் விருந்துகளின் எண்ணிக்கை குறையலாம் ஆனால் மொய் என்ற பழக்கம் என்றும் தொடரும் என்கிறார்கள்.