Skip to main content

தட்டார்மடம் வாலிபர் கடத்திக் கொலை... இன்ஸ்பெக்டரின் தொடர்புகளைக் கிளறும் சி.பி.சி.ஐ.டி!

Published on 04/10/2020 | Edited on 04/10/2020
Thattarmadam incident... cbcid investigation

 

நிலவிவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் தட்டார்மடம் வாலிபர் செல்வன் கடந்த மாதம் 17ம் தேதி மர்ம கும்பலால் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக அ.தி.மு.க.வின் வர்த்தக அணிச் செயலாளர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துக்கிருஷ்ணன், சின்னத்துரை முத்துராமலிங்கம் ஆகியோர் மீது கொலை வழக்கும், அதற்கு உடந்தையாகச் செயல்பட்ட தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சின்னத்துரை முத்துராமலிங்ம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன், இருவரும் சென்னை சைதாப் பேட்டை கோர்ட்டில் சரணடைந்தனர்.

இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் டி.ஜி.பி.திரிபாதி ஒப்படைத்தார். சென்னையில் சரணடைந்தவர்களை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களைப் பேரூரணி சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்த இவர்களை 8 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதிகோரி கேவில்பட்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சி.பி.சி.ஐ.டி.யின் டி.எஸ்.பி.யான அனில்குமார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆஜராகும் பொருட்டு நான்கு பேர்களும் பாதுகாப்பாக நீதிமன்றம் கொண்டு வரப்பட்டனர். அவர்களை 6 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி.யினர் விசாரிப்பதற்காக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுமதியளித்தார்.

 

Thattarmadam incident... cbcid investigation


இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காவலில் எடுக்கப்பட்டவர்களிடம் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.யினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தனது அலைபேசியில், கைதான திருமணவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகியோரிடம் எத்தனை முறை பேசியுள்ளார் என்ற விபரங்களை ட்ரேஸ் செய்யும் பணியிலிருக்கின்றனராம் சி.பி.சி.ஐ.டி.யினர்.

அதனைக் கொண்டு இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தப்படுவதுடன் செல்வன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் மட்டுமின்றி எஸ்.ஐ.க்கள் போலீசாருக்குத் தொடர்பிருக்கிறதா என்றும் அவரிடம் விசாரணை நடத்தப்படுமெனத் தெரிகிறது. சி.பி.சி.ஐ.டி.யினரின் பிடி இறுகுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

இரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
police confiscated liquor  who were smuggled in luxury car in Thoothukudi

இந்தியாவில் லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தொடங்கிய காரணத்தால், தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு விலக்கு பகுதியில் வாகன சோதனை நடைபெற்றுள்ளது. சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் இந்த வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரவு சுமார் 8.30 மணியளவில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அந்தக் காரை கவனித்த போலீசார், உடனே காரை நிறுத்தும்படி சைகை காண்பித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அந்தக் கார் வேகமாக வந்துள்ளது. இதனால் கடுப்பான போலீசார், உடனே அந்தக் காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அந்தக் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, அந்தக் காரில் தேர்தல் செலவிற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா?... என்ற கோணத்தில் காரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த சொகுசு காருக்குள் விலை உயர்ந்த 12 பீர் பாட்டில்கள் இருந்துள்ளது. ஆனால், அந்த வகை மதுபாட்டில் அரசு மதுபான கடைகளில் கிடைக்காது என சொல்லப்படுகிறது. இதனால், இது குறித்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். ஆனால், ஓட்டுநர் எந்த பதிலும் கூறவில்லை என சொல்லப்படுகிறது. அதன் பின்னர், அதே காருக்குள் பெரிய பை ஒன்று இருந்துள்ளது. அந்தப் பையில் என்ன இருக்கிறது என சோதனையிட்ட போலீசாருக்கு மேலும் பெரும் அதிர்ச்சியாகியுள்ளது.

காரணம் அந்தப் பையில் மேலும் சில மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களை வைத்திருந்தது குறித்து ஓட்டுநரிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் கார் ஓட்டுனர், நாகர்கோவிலைச் சேர்ந்த வினோத்குமாரின் மகன் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த விலை உயர்வான மதுபாட்டில்கள் எந்த இடத்தில் வாங்கப்பட்டது என வாய்த்திறக்கவில்லை.

அதே சமயத்தில் இந்த மது பாட்டில்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்காக வாங்கி வரப்பட்டதா?... என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அந்த ஓட்டுநரை உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். சாத்தான்குளம் பகுதியில், மது பாட்டிலோடு வந்த சொகுசு கார் ஒன்று, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.