Skip to main content

மகளுடன் சாலையோரம் நடந்துசென்ற ஆசிரியர் லாரி மோதி பரிதாப பலி... ஓட்டுநர் கைது!

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாராமங்கலம் அருகே மனாத்தாள் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வந்தவர் கிரிஸ்டி அகஸ்டா ராணி. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது மகளுடன் தாரமங்கலம் பேருந்துநிலையம் அருகில் சென்றுகொண்டிருந்தார்.

tharamangalam accident case..driver arrest


சாலையின் விளிம்பில் நடந்து சென்று கொண்டிருந்த அவர் மீது பின்புறமாக நங்கவல்லியை நோக்கி சென்ற டிப்பர் லாரியானது மோதியதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஆசிரியை அகஸ்டா ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட அவரது மகள் கதறி அழுதது மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. 

 

tharamangalam accident case..driver arrest


அந்த காட்சியில் லாரி தடுமாறியோ அல்லது ஓட்டுநர் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்த முயற்சித்து கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து எதிர்பாராத விதமாக நடந்ததற்கான எந்த ஒரு அனுமானமும் இல்லை. வேண்டுமென்றே மோதியதுபோல சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது இந்த சம்பவம். அதோடு அவரை திட்டமிட்டு இடிப்பதற்காக சாலையைவிட்டு இறங்கி விபத்தை ஏற்படுத்திவிட்டு சாலைமீது ஏறி நிற்காமல் சென்றது அந்த லாரி.

 

tharamangalam accident case..driver arrest


இந்த சம்பவத்தில் தொடர்புடைய  லாரியையும், தப்பித்து ஓடிய லாரி ஓட்டுனரையும் தாரமங்கலம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் லாரி ஓட்டுநர் வேலு கிருஷ்ணனை தாரமங்கலம் போலீசார் கைது செய்து ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறை டூ அரியலூர்? சிறுத்தை நடமாட்டத்தால் குழப்பத்தில் வனத்துறை!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Leopard movement near Ariyalur; Forest department in confusion

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த இரண்டாம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர். அந்தப் பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இத்தகைய சூழலில் சிறுத்தை இடம்பெயர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதாவது மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் இடம் பெயர்ந்த சிறுத்தை குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சுற்றித் திரிவதாகத் தகவல்கள் வெளியானது. இந்தத் தகவலை அடுத்து  வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டனர். அந்தப் பகுதியில் சுமார் 15 இடங்களில்  தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூண்டுகளும் அமைக்கப்பட்டது. அதோடு கடந்தாண்டு நீலகிரி அருகே உள்ள மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த ஆட்கொல்லி புலியான டி23 புலியைப் பிடிப்பதில் மிகுந்த நேர்த்தியாகச் செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகிய இருவரும் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தனர். இவர்கள் வனத்துறையுடன் சேர்ந்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இத்தகைய சூழலில் மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் சிறுத்தையைப் பார்த்ததாகத் தொழிலாளி ஒருவர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்திருந்தார். இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் தெர்மல் ட்ரோன் உதவியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாகச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். 

Leopard movement near Ariyalur; Forest department in confusion

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள மருத்துவமனையில் உள்ள வேலியின் சுவரில் சிறுத்தை ஏறி குதிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதன் மூலம் அரியலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் சிறுத்தையைப் பார்த்ததாக கூறியுள்ளனர். அதே சமயம் மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தையும், செந்துறையில் தென்பட்ட சிறுத்தையும் ஒன்றா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இது குறித்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தெரிவிக்கையில், “சிறுத்தை பிடிபட்ட பின்னரே அதன் உடல் அமைப்பை வைத்தே மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தையும், செந்துறையில் தென்பட்ட சிறுத்தையும் ஒன்றா என உறுதிப்ப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார். அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Next Story

புரோகிதர் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு; போலீசார் விசாரணை

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 50 pound jewelery stolen from priest's house; Police investigation

புரோகிதர் வீட்டில் 50 பவுன் நகை மர்ம நபர்களால் திருடப்பட்ட கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லபாக்கத்தில் வசித்து வருபவர் ரங்கராஜ். புரோகிதம் செய்யும் தொழில் வந்த செய்து வந்த ரங்கராஜ் கடந்த வெள்ளிக்கிழமை அவருடைய தந்தையின் நூறாவது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவருடைய குடும்பத்துடன் மயிலாப்பூர் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்பொழுது திடீரென ரங்கராஜன் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிப்பவர்கள் அவருக்கு போன் செய்து உங்களுடைய வீட்டின் கதவு திறந்து கிடக்கிறது என பகீர் தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். வந்து பார்க்கையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 50 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு ரங்கராஜ் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரங்கராஜன் வீட்டிற்கு வெளியே சிசிடிவி கேமராக்கள் அந்த பகுதியில் பொருத்தப்படாததால், குற்றவாளியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.