Skip to main content

நின்றுபோன திருவிழா எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்ததால் மக்கள் மகிழ்ச்சி

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

 

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாதி மதம் கடந்து ஒன்றாக கோயில் திருவிழாவை நடத்தியிருக்கின்றனர் சோழியவிளாகம் கிராமத்து மக்கள்.

k

 

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா  திருப்பனந்தாள் ஒன்றியத்தின் கடைக்கோடி கிராமம் சோழியவிளாகம். அங்கு பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோயிலில் அனைத்து சமூக மக்களுக்கும் வழிபட்டுவந்தனர். அதோடு பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் இக்கோயிலின் குளதெய்வக்காரர்கள் இருக்கின்றனர்.  தினசரி பக்தர்கள் வந்தவன்னமாகவே இருப்பார்கள். 

 

இந்த நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது நடந்த சாமி வீதிவுலாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு சாமி வீதி உலா வராது என சிலர் பிரச்சனை செய்தனர். அப்போது இருந்த திருவிடைமருதூர் தாசில்தார் காமராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கம் போல் அனைத்து சமூகத்தவர் குடியிருப்பு பகுதிகளுக்கும் அம்மன் ஊர்வலம் போய்வர வேண்டும் என பேசி முடிக்கப்பட்டது.   ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களை தவிர மற்ற சமுகத்தில் உள்ள சிலர் பிடிவாதமாக மறுத்தனர்.  இதனால் எட்டு ஆண்டுகள் திருவிழா நடக்காமல் பூட்டியே கிடந்தது.

 

k

 

இந்த நிலையில் சோழியவிளாகத்தில் உள்ள பலதரப்பட்ட சமுத்தினைச்சேரந்த வெங்கடேஷ் அய்யர், ஜீ.ஆர்.எஸ்,முரளி, நக்கீரன்செல்வகுமார், ரவி, செந்தில் டி,என்,இ,பி,பாலமுருகன்,  உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி சுமுகமாக பேசி சோழியவிளாகத்தின் நலன் கருதி அனைத்து சமூக மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் சுவாமி ஊர்வலம் கொண்டு செல்வது என முடிவெடுத்து திருவிழாவை மிக விமர்சையாக நடத்தி முடித்துள்ளனர்.

 

நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு அனைத்து சமுக மக்களும் ஒன்றுகூடி திருவிழா நடத்தியிருப்பது அப்பகுதியில் பெருமையாக பேசப்பட்டுவருகிறது.

 

இதுகுறித்து ஜீ,ஆர்,எஸ், முரளி கூறுகையில், " சோழியவிளாகம் மற்ற கிரகங்களை விடமாறுபட்ட கிராமம். இங்கு சாதி மதம் எதுவும் இல்லாமல் பல ஆண்டுகளாக ஒரு தாய் பிள்ளைகளைப் போல வாழ்ந்துவந்தோம். ஒற்றுமையாக இருந்து வந்தோம். 8 ஆண்டுக்கு முன்பு ஒரு சிலரால் அசம்பாவிதம் நடந்துவிட்டது. அதை மறந்து, முறியடித்து, மீண்டும் கிராமத்தை ஒன்றாக்கி திருவிழாவை நடத்தி இருக்கிறோம். திருவிழாவில் அனைத்து சமூக மக்களும் சாமி தரிசனம் செய்து கொண்டதோடு, அனைத்து சமுகத்தவர் குடியிருப்புகளுக்கும் ஊர்வலம் சென்றது. சாமி ஊர்வலத்தை மிக அருமையாக ஒற்றுமையாக நடத்தி முடித்திருக்கிறோம். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் குழுவாக செயல்பட்டு முடித்துள்ளோம். இனி தொடர்ந்து திருவிழா நடக்கும்.  வரும் ஆண்டுகளில் முன்பு  நடந்ததைப்போல தீமிதி திருவிழாவும் நடக்கும்." என்றார் பெருமையாக.

 

தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் சின்னைப்பாண்டியனோ, " தமிழகத்தில் சாதிய ஆதிக்க சிந்தனையை கூர் தீட்டி விடும் வேளையில்  8 ஆண்டுகளாக நின்று போன திருவிழாவை கிராம முக்கியஸ்தர்களே சாதிகளை கடந்து ஒன்றினைந்து அனைத்து சமூக மக்களிடத்தில் பேசி தலித் தெரு உள்ளிட்ட அனைத்து தெருவிற்கும் சாமி வீதியுலாவை கொண்டு சென்று மிக சிறப்பாக திருவிழாவை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களின் ஒற்றுமைக்கு மக்களே எடுத்த நல்ல முயற்சியின் உதாரணம். புதிய நம்பிக்கையின் ஒளிக்கீற்று. அனைத்துப் பகுதி மக்களுக்கும் நல்வாழ்த்துக்கள். அந்த கிராமத்தை அனைவரும் பின்பற்றினால் நாட்டில் பிரச்சினைகளுக்கே வேலையிருக்காது." என்கிறார்.

 

பல கிராமங்களில் கோயில்கள் சாதியால் பிரிக்கப்பட்டுக்கிடக்கிறது. கோயில் திருவிழாவில் சாதிய மோதலால் உயிர் இழப்புகள் கூட நடந்துள்ளது, ஆனால் எந்த இழப்பும் நடக்காமல் அரசு இயந்திரங்கள் செயல்படாமல் அனைத்து சமுக மக்களும் ஒன்றுகூட இனி சாதிம தப்பாகுபடுகளே நமது கிராமத்தில் இருக்ககூடாது என முடிவெடுத்து திருவிழாவை நடத்தி அசத்தியுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.