Skip to main content

விபத்தில் சிக்கிய அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர்கள் நிதியுதவி!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அப்ரா பாத்திமா (வயது 8), இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஏழ்மை நிலையில் இருந்த மாணவியின் மருத்துவ சிகிச்சைக்காக பல்வேறு தரப்பினரும் உதவி செய்த நிலையில் தற்போது சிகிச்சை முடிவடைந்த மாணவி வீடு திரும்பி உள்ளார். 

 

 

இந்நிலையில் பள்ளி மாணவிக்கு உதவ சேதுபாவாசத்திரம் வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து பள்ளி ஆசிரியர்களிடம் ரூ 1 லட்சத்து 31 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது. இதை பட்டுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், மாணவியின் பெயரில் கணக்கு தொடங்கி நிரந்தர வைப்புத் தொகையாக போடப்பட்டது. மாணவி உயர்கல்விக்காக கல்லூரி செல்லும் போது, வரும் 2029 ஆம் ஆண்டில் முதிர்வு தொகையாக ரூ 2 லட்சத்து 58 ஆயிரத்து 282 கிடைக்கும் வகையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

 

 

thanjavur Teachers sponsor school accident student

 

 

இந்நிலையில் இதற்கான வைப்புத் தொகைக்கான பத்திரத்தை வட்டாரக்கல்வி அலுவலர்கள் எம்.கே.ராமமூர்த்தி, சகுந்தலா ஆகியோர் முன்னிலையில், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் செ.முத்தரசன், மாவட்ட பொருளாளர் செ.பாலமுருகன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் ஏ.வி.சந்திரசேகர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வட்டாரச் செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட துணைச் செயலாளர் ஜோசப் சந்திரன் ஆகியோர் மாணவி மற்றும் அவரது பெற்றோர்களிடம் வீடு தேடிச் சென்று வழங்கினர். இதனைப் பெற்றுக் கொண்ட மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். 

 

 

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "மாணவியின் தந்தை வறுமை நிலையில் உள்ளது அறிந்து, மாணவிக்கு உதவ வேண்டும் என முடிவெடுத்தோம். இதில் சேதுபாவாசத்திரம் வட்டார ஆசிரியர்களும் மகிழ்ச்சியோடு உதவ முன்வந்தனர். இதில் வசூலிக்கப்பட்ட தொகை வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக போடப்பட்டது. மாணவி கல்லூரி செல்லும் காலத்தில் உதவும் வகையில் இவ்வாறு திட்டமிடப்பட்டது' என்றனர். ஆசிரியர்-மாணவர்கள் உறவு என்பது அனைத்தையும் விட மேலானது என இந்நிகழ்வு உறுதிப்படுத்தி உள்ளது. ஆசிரியர்களின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.