Skip to main content

கிராமத்தில் ஒரு தேசிய தரத்தில் அரசு ஆரம்ப நிலையம்.  தேசிய தரச்சான்று அதிகாரிகள் ஆய்வு...  

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செருவாவிடுதி கிராமத்தில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணிகளின் சிறப்பால் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆனாது. இங்கு பொது மருத்துவம், சித்த மருத்துவப் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, பல் சிகிச்சை, குழந்தைகள் பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. நவீன ஸ்கேனர் வசதிகள், அறுவை அரங்கம், என தனியார் மருத்துவமனைகளைப் போல சுத்தம், சுகாதாரத்துடன் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் இயங்கி வருகிறது. வண்ண வண்ண கட்டிடங்கள். சுவர்களில் விழிப்புணர்வு விளம்பர சித்திரங்கள், குழந்தைகளுக்காக சிறுவர் பூங்கா, இப்படி அத்தனை வசதிகளும் உள்ளது. மருத்தவர்கள் அறை, செவிலியர்கள் அறை, மருந்துகள் வைப்பறை என்பதுடன் இருப்பு உள்ள மருந்துகளின் விபரங்களம் பெயர் பலகையில் வைக்கப்பட்டுள்ளது. 
 

pudukotai

 

 

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினரின் கனிவான கவணிப்பால் முகம் சுளிக்காமல் வந்து செல்லும் நோயாளிகளுக்கு விரைவில் குணமடைகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஐஎஸ்ஓ உலகத் தரச்சான்றிதழ் இம்மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்காக தனி கவணிப்புகள். அவர்களின் நலனில் அக்கரை கொண்டு முதல் முதலில் கர்ப்பணிகளுக்காக வளைகாப்பு திருவிழா நடத்தியது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான். 

அதே போல சுகாதார நிலைய வளாகத்தில் மூலிகைத் தோட்டம், இயற்கை முறையில் நச்சுக் கலப்பில்லாத காய்கறிகளை பயிரிட்டு கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு கொடுப்பதுடன் அவர்கள் வீட்டிலும் சாப்பிட காய்கனிகளை வழங்கி வருகின்றனர். தொடர்ந்து நோயாளிகளுக்கு நாட்டுக்கோழி முட்டை, பசுமாடு சுகாதார நிலைய வளாகத்திலேயே வளர்த்து, சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி பெண்களுக்கு வீடு தேடிச் சென்று பால், முட்டை, நாட்டு வெல்லம், இயற்கை காய்கறிகள் வழங்குதல் என சிறப்பான கவணிப்புகளும் உண்டு. இந்த பணிகளுக்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் பாராட்டு பெற்றது இம்மருத்துவமனை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்டு, நன்கொடையாளர்கள் உதவியாலும், மருத்துவ அலுவலர்களின் சொந்த முயற்சியாலும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளது. 

இந்நிலையில் தான் மத்திய அரசின் தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான முயற்சிகளை மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் மேற்கொண்டு வந்தார். இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய அதிகாரிகள் குழு (அக்.23, 24) புதன், வியாழக்கிழமை ஆகிய இரு நாட்கள் வருகை தந்து செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தனர். தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ் இங்கு வழங்கப்படும் சுகாதார சேவைகள், பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வுகள் செய்ததுடன் நோயாளிகளிடமும்  கருத்துக்களை கேட்டறிந்தனர். 

மத்திய ஆய்வுக்குழுவில் டாக்டர் ஐ.கே.கோகர், சுனில் குமார் சர்மா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் தஞ்சை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ரவீந்திரன், தொற்றாநோய் மாவட்ட திட்ட அலுவலர் டாக்டர் வினோத் குமார், மாவட்ட பயிற்சி அலுவலர் டாக்டர் தீபக், மருத்துவ அலுவலர் பிரதீப் ராஜ், பிறப்பு மற்றும் இறப்பு இணை இயக்குநர் டாக்டர் டி.ரவிச்சந்திரன், மாவட்ட தாய்- சேய் நல அலுவலர் டாக்டர் அம்பிகா, ஆலோசகர்கள் டாக்டர்கள் ஆண்டனி, கோபாலகிருஷ்ணன், பரத் ஆகியோர் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.