Skip to main content

கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் மருத்துவர் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

கும்பகோணம் அருகே அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரோடு, மருத்துவர் ஒருவர் கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

 

Thanjavur incident

 



தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் ராம்குமார். ரஷ்யாவில் மருத்துவம் படித்தவர் சொந்த கிராமத்திற்கு சேவகனாக இருக்கும் வகையில் உள்ளூரிலேயே மருத்துவமனை வைத்துக்கொண்டு, சொந்த நிலத்தில் விவசாயத்தையும் கவனித்துவருகிறார். இவரது மனைவி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருந்துவருகிறார். டாக்டர் ராம்குமார் சிறுவயது முதலே துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்துவருகிறார். பெரம்பலூரில் உள்ள துப்பாக்கிச்சுடும் கிளப்பில் உறுப்பினராக இருந்துவருகிறார். அந்தவகையில் இவரிடம் பல்வேறு வகையான துப்பாக்கிகள் புழகத்தில் இருந்திருக்கின்றன.  துப்பாக்கிக்கான உரிமம் சிலமாதங்களுக்கு முன்பு காலாவதியானது, அதனை புதுபிக்காமல் போனதால் போலீஸாரிடம் சிக்கி சிறைக்கு சென்றிருக்கிறார்.

இது குறித்து காவல்துறையில் விசாரித்தோம்," தன்னிடமுள்ள ஒரு துப்பாக்கியை விளந்தகண்டம் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் சக்திவேல் என்பவரிடம் கொடுத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்று தரும்படி கூறியிருக்கிறார். ஏற்கனவே சக்திவேல் மீது சிலை கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரை போலீஸார் தீவிரமாக கண்காணித்தபடியே இருந்தனர். இந்தநிலையில் கள்ளத்துப்பாக்கியை சக்திவேல் விற்க முயற்சிப்பது, ரகசியமா தகவல் கிடைத்தது, பிறகு அவரை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தோம். சக்திவேல் தனது நண்பரான திருப்பனந்தாள் அருகே உள்ள முட்டக்குடியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அரவிந்தன் என்பவர் மூலமாக கள்ளத்துப்பாக்கி விற்பனைக்கு கொண்டு சென்றபோது அவர்களை மடக்கிப் பிடித்து ராம்குமார், சக்திவேல், அரவிந்தன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில்  அடைத்துள்ளோம்." என்கிறார்கள்.

இது குறித்து சோழபுரம் பகுதியில் விசாரித்தோம். அப்பகுதி மக்கள்" டாக்டர் ராம்குமார் வசதியாகத்தான் இருக்கிறார். அவரும் அவரது மனைவியும் கை நிறைய சம்பாதிக்கின்றனர். அதோடு சொந்தமாக ஏகப்பட்ட விவசாயம் நிலம் இருக்கிறது. இதில் பொறாமை கொண்ட யாரோ அவரை சிக்கவைத்துவிட்டனர்" என தெரிவித்தனர்.

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.