Skip to main content

காயமடைந்த மயிலுக்கு சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்... குவியும் பாராட்டு!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

காயமடைந்த நிலையில் உணவு உட்கொள்ள முடியாத நிலையில் இருந்த மயிலுக்கு, சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டு குவிகிறது. 
 

மயில்களின் சரணாலயம் விராலிமலை என்று புத்தகங்களில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அங்கே மயில்கள், குரங்குகளுக்கு பாதுகாப்பாக வாழ வழியில்லாத இடமாக மாறிவிட்டது. வனங்கள் அழிக்கப்பட்டு தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கும் சீமைக்கருவேல மரங்களும், தைல மரக்காடுகளையும் அரசு வளர்க்கத் தொடங்கியதும் தேசிய பறவைகள் வாழ வழியற்றி இப்படி உணவுக்காகவும், தண்ணீருக்காகவும், பாதுகாப்புக்காகவும் வெளியிடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது மயில்கள். இப்படி இடம் பெயரும் மயில்கள் மற்றும் மான், குரங்குகள் அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்கி மடிகின்றன. பல இடங்களில் தோட்டங்களில் வைக்கப்படும் விஷம் தின்று மடிகின்றன.

thanjavur district vilailmalai peacock incident youngsters

தஞ்சாவூர் மாவட்டம், பழைய பேராவூரணியில், காலில் காயமடைந்த நிலையில் முட்புதரில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் மயில் மயங்கிக் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து, அங்கு சென்ற பேராவூரணியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மருத.உதயகுமார், பழைய பேராவூரணி மணிகண்டன், திருச்சிற்றம்பலம் அருண் ஆகியோர் அந்த மயிலைப் பிடித்தனர். 
 

இதுகுறித்து, பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது ஆலோசனையின் பேரில், பேராவூரணி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கால்நடை மருத்துவர் ஏ.ரவிச்சந்திரன், கால்நடைத்துறை முதுநிலை மேற்பார்வையாளர் இந்திராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பாஸ்கரன் ஆகியோர் உடனடியாக மயிலுக்கு சிகிச்சை அளித்தனர். 

இதில் பறக்கும் போது மரக்கிளையில் மோதி காலில் லேசான அடிபட்டிருந்தது தெரிய வந்தது. சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் தேறிய மயில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பால் முன்னிலையில், வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, காப்புக் காட்டில் பறக்க விடப்பட்டது. 

அப்போது பேராவூரணி வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், கிராம நிர்வாக அலுவலர் ரமணி, கிராம உதவியாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். காயமடைந்த தேசியப் பறவையான மயிலை மீட்டு, சிகிச்சை அளிக்க உதவிய இளைஞர்களை வட்டாட்சியர், வனச்சரக அலுவலர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
 

பறவைகள், வன விலங்குகளை பாதுகாக்க தைல மரக்காடுகளையும், சீமைக்கருவேல மரங்களையும் அழித்து அரசு நிலங்களில் மீண்டும் வனங்களை உருவாக்க வேண்டும். அப்போது தான் நீர்நிலைகளும் பாதுகாக்கப்படும், வன விலங்குகள், பறவைகளும் பாதுகாக்கப்படும். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.