Skip to main content

நண்பனின் தந்தை மரமாக எழுவார்... விதைப்பந்துகளை வீசிய நண்பர்கள்!

Published on 11/04/2021 | Edited on 11/04/2021

 

thanjavur district seeds balls spreaded

 

ஒரு நண்பரின் தந்தை இறந்ததால், அவர் மீண்டும் மரமாக எழுவார் என்று ஆயிரம் விதைப்பந்துகளை வீசியுள்ளனர் நண்பர்கள்.

 

புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகள், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் மரக்கன்றுகள் நட்டு விழா தொடங்குவதும், விழாவுக்கு வருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவதும் வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர்.

thanjavur district seeds balls spreaded

 

அந்த வகையில், தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள நாடியம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் நிமல் ராகவன். இவர் புயல் நேரத்தில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அதைத் தொடர்ந்து சக நண்பர்களை இணைத்துக் கொண்டு மீட்புப் பணிகள் முதல் நிவாரணப் பணிகள் வரை செய்தார். மேலும், நிலத்தடி நீரைச் சேமிக்க டெல்டா மாவட்டங்களில் பல வருடங்களாகத் தூர்வாரப்படாத நீர்நிலைகளை சீரமைக்க இரு மாவட்ட தன்னார்வ இளைஞர்களுடன் இணைந்து 'கைஃபா' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல நிறுவனங்கள், தன்னார்வலர்களின் உதவியுடன்  சுமார் 75 பெரிய ஏரி, குளங்களை சீரமைக்கப்பட்டது. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கும் நேரில் சென்று கலந்து கொண்டார்.

thanjavur district seeds balls spreaded

 

இவரது தந்தை ராகவன் உடல்நலக்கோளாறு காரணமாக நேற்று முன்தினம் (09/04/2021) மறைந்தார். இந்த நிலையில் அவரது துக்க நிகழ்வுக்கு சென்ற நிமல் ராகவனின் நண்பர்கள் நிமலின் தந்தை புதைக்கப்படவில்லை விதைக்கப்படுகிறார் என்று சுமார் 1000 விதைப் பந்துகளை ராகவன் தகனம் செய்யப்பட்ட பகுதியில் விதைத்துள்ளனர். மேலும் நண்பனின் தந்தை மீண்டு மரமாக எழுவார் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.