Skip to main content

பொன்னமராவதி விவகாரம் - ஆடியோவில் பேசிய முக்கிய நபர் திருச்சி விமான நிலையத்தில் கைது

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

 

   தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி வட்டார மொழியில் பெண்களை இழிவாக பேசிய ஆடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது. பொன்னமராவதியில் முற்றுகை கலவரம் கல்வீச்சு நடந்தது.

 

s


 

இதில் சிங்கப்பூரில் இருந்து ஆடியோ வெளியிட்டதாக பட்டுக்கோட்டை கரிசல்காடு செல்வகுமார் சிங்கப்பூரில் இருந்து வந்த போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் சொன்னதன் அடிப்படையில் பள்ளிகொண்டான் வசந்த் கைது செய்யப்பட்டார்.   

 

t

 

இவர்கள் சொன்ன தகவலின் படி ஆடியோவில் பேசியதாக கூறப்படும் புதுக்கோட்டை சித்தன்னவாசல் நெரிஞ்சிப்பட்டி சக்தி என்கிற சத்தியராஜ் (30)  திருச்சி விமான நிலையத்திற்கு வந்த போது பொன்னமராவதி போலிசார் கைது செய்து புதுக்கோட்டை அழைத்துச் சென்றுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்