Skip to main content

ஜொலிக்கும் தஞ்சை பெருவுடையார் கோயில்... இருண்டுகிடக்கும் உடையாளூர் ராஜராஜ சோழன் சமாதி!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

தமிழர்களின் கட்டிடக்கலையை உலகிற்கு பறைசாற்றிவரும் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவால் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளும், ஆன்மீக பக்தர்களும், சாரை சாரையாக வந்த வண்ணமே இருக்கின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் நினைவிடமாக குறிப்பிடப்படும் உடையாளூர் பகுதி எப்படி இருக்கிறது என்பதை அறிய அங்கு பயணித்தோம்.

thanjai temple festival king Rajaraja Cholan place not maintained government

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து தெற்கு நோக்கி ஆறாவது கிலோமீட்டரில் இருக்கிறது உடையாளூர் என்கிற கிராமம். அந்த கிராமத்திற்கு செல்லும் வழியிலேயே இடதுபுறமாக சின்னதாக ஒரு தகவல்கூறும் பிளக்ஸ் போர்டு ஒன்று மரத்தில் தொங்கியது, இருபுறமும் வீடுகள் நெருக்க, குருகலான வழியில் ராஜராஜசோழனின் நினைவிடத்தை நோக்கி சென்றோம், அந்த இடத்திற்கு சென்றதும் நமக்கு பகிர் என்று ஆனது. வயதான இரண்டு பாட்டிகள் நெல்லை உலர்த்திக்கொண்டு தலையை கோதிக்கொண்டிருந்தனர் மற்றபடி யாரும் வந்து போனதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது.

பெருவுடையார் கோயில் மூலம் உலகம் முழவதும் உள்ள தமிழர்கள் கட்டிடக்கலையில் மார்தட்டிக்கொள்ள செய்த பேரரசன் ராஜராஜ சோழனின் இறுதிகாலம் குறித்தான சந்தேகம் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் அவரது உடல் உடையாளூரில் தான் அடக்கம் செய்யப்பட்டது என பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் தலையிட்ட நீதிமன்றம், ஆய்வு செய்ய உத்தரவிட்டது, அதன்படி ஆய்வுகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளது.

thanjai temple festival king Rajaraja Cholan place not maintained government

இது ஒருபுறம் இருக்க, ராஜராஜசோழனின் சமாதி இங்குதான் உள்ளது என பலதரப்பட்ட மக்களும் நம்புகின்றனர், மற்ற விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் சமாதிக்கு வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் தஞ்சை கோயிலுக்கு வரும் ஐந்தாம் தேதி குடமுழுக்கு நடக்க இருக்கிறது, அதற்காக யாகபூஜைகள் மூன்று நாட்களாக நடந்து வருகிறது. பாதுகாப்புகள் பலபடுத்தப்பட்டு கலர் சீரியல் லைட்டுகளால் ஜொலித்து வருகிறது. ஆனால் அந்த கோயிலை கட்டிய ராஜராஜசோழனின் சமாதியோ லைட் இல்லாமல் கிடக்கிறது.

இதுகுறித்து அங்கு நெல் உலர்த்திக் கொண்டிருந்த வயதான பாட்டிகள் காளியம்மாள், கன்னியாயிடமும் கேட்டோம், "தினசரி யாராவது ஒருவர் வெளியூரிலிருந்து சமாதியை பார்க்க வருவாங்க ஆனா நாளைக்கு தஞ்சாவூர்ல கும்பாபிஷேகம், இங்க கூட்டம் தாங்காதுன்னு நினைத்தோம், ஆனா ஒரு காக்கா குருவிக்கூட வரல," என்றனர்.

thanjai temple festival king Rajaraja Cholan place not maintained government

பூசாரி நடராஜனோ, "அந்த காலத்தில் இந்த பகுதியை காடாக இருந்தது, ராஜராஜ சோழன் தனது இறுதி காலத்தின் இங்கு பழையார் எனும் இடத்தில் அரண்மனைக்கட்டிக்கொண்டு வாழ்ந்துள்ளார். தஞ்சை கோயிலை போலவே பழையாரில் சோமநாதர் கோயிலையும் கட்டி வழிபட்டிருக்கிறார். அந்த கட்டிடம் தற்போது முண்டம்போலவே இருக்கிறது, மீதமுள்ள பகுதி சிதைந்து கிடக்கிறது. தஞ்சை குடமுழுக்குக்காக, கோபுரத்தின் மீது இருந்த செடிகொடிகளை சுத்தம் செய்திருக்காங்க, அங்கு வாழ்ந்த அரசனின் உடலை ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இந்த உடையாளூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றனர். குடமுழுக்கு முடிந்ததும் இங்கு கவனம் செலுத்துவார்கள் போல தெரிகிறது." என்கிறார்.

thanjai temple festival king Rajaraja Cholan place not maintained government

பல கோடி ரூபாய் செலவில் தஞ்சை பெரிய கோயிலுக்கு குடமுழுக்கு நடந்துவருகிறது, ஆயிரம் ரூபாய் செலவு செய்து கோயிலை கட்டிய மாமன்னனின் சமாதிக்கு ஒரு லைட் போடவில்லையே என்பதே தமிழ் ஆர்வலர்களின் வருத்தமாக இருக்கிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

கல்லணை கால்வாய்க்கரை வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Kallanai Canal Bank Veeramakaliamman Temple Mulaipari Festival

தை முதல் நாளில் தொடங்கும் திருவிழாக்கள் கிராமங்களில் களைகட்டி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசிமகத் திருவிழா கிராம மக்களை குதூகலப்படுத்தியது. அதிலும் புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள ஆசியாவில் உயரமான குதிரை சிலை கொண்ட பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவில் லட்சம் பேர் திரண்டிருந்தனர். ஆட்டம், பாட்டமும், சர்க்கஸ் கலை நிகழ்ச்சிகளும் பஞ்சமில்லாமல் நடந்தது.

Kallanai Canal Bank Veeramakaliamman Temple Mulaipari Festival

அதே போல தான், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணைக் கால்வாய் ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. காப்புக் கட்டியதும் ஒவ்வொரு வீட்டிலும் விரதமிருந்து மண் சட்டிகள், உட்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்த முளைப்பாரியை தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கைகளுடன் கிராம மக்கள் நேற்று ஊர்வலமாக தூக்கிச் சென்று, மண்ணடித் திடலைச் சுற்றி ஒன்று சேர்ந்து கல்லணைக் கரையோரம் உள்ள பெரிய குளத்தில் விட்டனர். 

மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.