Skip to main content

குடிமராமத்து குளத்தில் புதையலாக கிளம்பும் தாழிகள்!!! பாதுகாப்பு வளையமிட்ட இளைஞர்கள் ஆய்வு செய்ய கோரிக்கை...

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

history

 

தமிழர்களின் வரலாறு, வாழ்க்கைமுறை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வரலாற்று சான்றுகள் பல ஆயிரம் ஆண்டுகளாக புதையுண்டு கிடக்கிறது. கீழடியில் தமிழ் எழுத்து கிடைத்துள்ளது உலக தமிழர்களை தலைநிமிரச் செய்தது. அடுத்தடுத்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் நிலையில் மிருகத்தின் எழும்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தொல்பொருள் புதையுண்டு கிடப்பதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றங்களை நாடியுள்ளனர் தொல்லியல் ஆர்வலர்கள். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் மங்களநாடு – தஞ்சை மாவட்டம் மணக்காடு ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட அம்பலத்திடல் என்னும் இடத்தில் வன்னி மரங்கள் நிறைந்த வில்வன்னி ஆற்றங்கரையில் கருப்பு சிவப்பு முதுமக்கள் தாழிகள், தாழிகளுக்குள் எழும்புகள், சிறு சிறு பானைகள் என சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பல இடங்களிலும் பரவியுள்ளது. பழங்கால செங்கல், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கோடாரி என பல பொருட்கள் கண்டறியப்பட்டது. அந்த இடம் ஆய்வு செய்யப்பட்டால் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறுகள் கிடைக்கும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில்தான், தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள கட்டயன்காடு கிராமத்தில் உள்ள அய்யனார் குளம் குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களாக நடந்து வரும் நிலையில் சில அடி ஆழத்தில் பழமையான கருப்பு சிவப்பு வண்ணத்தில் பெரிய பெரிய சுடுமண் தாழிகள் வெளிப்படத் தொடங்கி உள்ளது. பல தாழிகள் உடைந்து பாதி அளவில் உள்ளது. இதைப் பார்த்த கிராம இளைஞர்கள் தாழிகளை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தாழிகள் காணப்பட்ட இடங்களை சிவப்பு கொடி நட்ட பாதுகாத்து வருகின்றனர்.

 

 

history


இது குறித்து அப்பகுதி கிராம இளைஞர்கள் கூறும் போது.. புதைந்துள்ள தமிழர்களின் வரலாறுகள் இப்படி தோண்டத் தோண்ட வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்தான் எங்கள் கிராமத்தில் கிடைத்துள்ள தாழிகளை ஆய்வு செய்வதுடன் மேலும் ஏதேனும் வரலாற்று சான்றுகள் கிடைக்கிறதா என்பதை தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும். அதனால்தான் தாழிகள் கிடைத்த பகுதியில் மராமத்துப் பணிகளை நிறுத்தி வைத்து கொடி நட்டு பாதுகாத்து வருகிறோம். இதுகுறித்து தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கும் தகவல் கொடுத்திருக்கிறோம். இது குறித்து ஆய்வு செய்ய தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆய்வு செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.


இந்த தாழியை பற்றி பல தொல்லியல் ஆய்வுகள் செய்துள்ள ஆய்வாளர்களிடம் கருத்து கேட்ட போது..

இந்த தாழியை (படமாக) பார்க்கும்போது சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாக தெரிய வருகிறது. இந்த தாழிகள் முதுமக்கள் தாழியாகவும் இருக்கலாம் அல்லது தானிய குதிராகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. அதாவது தாழியாக இருந்தால் அது புதைவிடமாக இருக்கலாம். புதைவிடமாக இருந்தால் அதிலிருந்து சற்று தூரத்தில் மக்களின் வாழ்விடம் இருக்க வாய்ப்புகள் உள்ளது. அல்லது தானிய குதிராக இருந்தால் அதில் பழைய நெல் மணிகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் மிகத் துள்ளியமாக ஆய்வு செய்தால் தமிழர்களின் கலாச்சாரம், வரலாற்றை அறியலாம் மேலும் பானைகளில் எழுத்துகள் இருக்கிறதா என்பதை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். வரலாற்றை அறிய பலரும் ஆவலாக உள்ளனர். ஆய்வாளர்கள் விரைந்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.