Skip to main content

கோயிலுக்கு வந்தால் ஆட்சி பறிபோகுமா? முதல்வர், அமைச்சர்கள் என அனைவரையும் அதிரவிட்ட பெருவுடையார்!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

தமிழர்களின் கட்டிடக்கலைக்கு உலக சான்றாக இருந்துவரும் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா இன்று பிப்ரவரி ஐந்தாம் தேதி இனிதே நடந்து முடிந்துள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கடந்த பத்து நாட்களாக மாவட்ட நிர்வாகம், உள்ளிட்ட ஆலய வழிபாட்டாளர்கள் செய்துவந்தனர். கடந்த குழுக்கு விழாவில் ஏற்பட்ட தீ விபத்தைப்போல எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதால், அதற்கு ஏற்ப திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பாதுகாப்பிற்காக 4500 காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் ஐந்துநாட்களாக கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்துவிட்டது.

 

Peruvutaiyar temple

 



குடமுழுக்கு விழாவிற்கு முதல்வர் பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வருவார்கள் என அதற்கான பில்டப் வேலைகளையும் செய்திருந்தனர். பொது வழியைவிட விஐபி, மற்றும் விவிஐபி வழியில்தான் கூட்டம் அலைமோதியது, அந்த அளவிற்கு பாஸ் வாரி வழங்கியிருந்தது மாவட்ட நிர்வாகம். குடமுழுக்கு விழாவான இன்று அதிகாலை முதலே மக்கள் வரத்துவங்கிவிட்டனர். அவர்களுக்கு கடைநிலை காவலர்கள் பக்குவமாக சென்று, திரும்பும் வழிகளைகூறி அனுப்பினர். பொதுமக்கள் குடமுழுக்கை பார்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தை தாண்டி, தடுப்புக்களில் ஏரிகுதித்து அகழிக்கரைவரை கூடிவிட்டனர் பொதுமக்கள்.

 



அமைச்சர் பெருமக்கள் வருவார்கள் என அவர்களுக்கான வழிகள் வெரிச்சோடியே கிடந்தது. ஆனால் அமைச்சர் ஓ,எஸ்,மணியன், கணேசன், எச்,ராஜாவைத்தவிர சொல்லிக்கொள்ளும்படியாக விவிஐபிக்கள் வரவில்லை. சரியாக 9.30 மணிக்கு கோபுர உச்சியில் பச்சைக்கொடிகாட்ட தரையில் நின்று கோபுரத்தை அன்னாந்து பார்த்தபடியிருந்த பொதுமக்கள் கைகூப்பி வணங்கினர், கலசத்திற்கு தண்ணீர் ஊற்றப்பட்டு தீபம் காட்டப்பட்டது.

ஏன் அமைச்சர்கள் வரவில்லை என அதிமுக பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம், " எல்லாம் ஆன்மீக சென்டிமெண்ட்தான். பெருவுடையார் கோயிலுக்கு வந்தால் பதவிக்கு ஆபத்துவந்து சோதனைகள் அதிகம் வரும் என்கிற பயம்தான் காரணம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சதயவிழாவில் கலைஞர் கலந்துகொண்ட பிறகே அவரது ஆட்சி போனது என்கிற நம்பிக்கையே அமைச்சர்களையும், அதிகாரிகளையும் வரவிடாமல் தடுத்துள்ளது. அதற்காக லோக்கல் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், விஜயபாஸ்கர் கூட வரவில்லை என்பதுதான் வேதனை" என்கிறார். 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.