தஞ்சைபாபநாசம் அருகே விவசாயத்தொழிலாளியை மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம்தெடர்பானவீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சைபாபநாசம் பூண்டி மேலத்தெருவைச் சேர்ந்தவிவசாயக் கூலித்தொழிலாளி ஒருவரை, பச்சை துணியால் கண்ணை கட்டிஅதே பகுதியைச் சேர்ந்தசிலஇளைஞர்கள் மரத்தில் கட்டிவைத்துபிரம்பால் அடித்துள்ளனர். வலியைத் தாங்க முடியாமல் அந்த கூலித் தொழிலாளி ''வேணாம்அண்ணா... வேணாம் அண்ணா...'' எனகதறும்அந்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளத்தில் பெரும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. செய்யாத குற்றத்திற்காக தான் தாக்கப்பட்டதாக கூறியகூலித்தொழிலாளி, இதனால் மனமுடைந்து விஷம் அருந்திதற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பணம் திருடியதாகக் கூறி கூலித்தொழிலாளி தாக்கப்பட்டதும், தாக்குதல் சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் அந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவுசெய்து அதை சமூகவலைதளத்தில் பரப்பியதும் தெரியவந்துள்ளது. அதேபோல்பணம் திருடியதாக எந்த காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எப்படி இருப்பினும், கூலித்தொழிலாளியைத் தாக்கும் அந்த வீடியோ காட்சியும்,அவர் கதறும் காட்சியும் காண்போரைப் பதற வைக்கிறது.