ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், தஞ்சை பெரியகோவில் உரிமை உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய தொல்லியல்துறையின் அனுமதியுடன் தான் தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த உள்ளோம். தஞ்சாவூர் பெரிய கோயில் தேவஸ்தானம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் தடை கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது.
இதில் கோவில் தரப்பில், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் குடமுழுக்கு மற்றும் முக்கிய பூஜைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டன. அப்போது எதிர்தரப்பிற்காக ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், கோவிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் கோவிலில் தீ விபத்து போன்ற விஷயங்களை தவிர்ப்பதற்காக யாக குண்டங்களை கோவிலுக்கு வெளிப் பகுதியில் அமைத்துள்ளோம் என அறநிலையத்துறை சார்பில் தெரிவித்தனர்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பை இன்று (29.01.2020) ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.