thanjai

தஞ்சை பர்மாகாலனிகூலித் தொழிலாளி குணசேகரன்ராஜலட்சுமியைகாதல் திருமணம் செய்ததால் இரு குடும்பங்களின் ஆதரவின்றி பிரசவத்திற்காகத் தஞ்சை ராசா மிராசுதார்மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை பெண் குழந்தை பெற்றெடுத்த நிலையில், ''உனக்குத்தாயாக நான் இருக்கிறேன்'' என்று அன்பும் ஆதரவும் காட்டிய ஒரு பெண் வெள்ளிக்கிழமை காலைராஜலட்சுமிகுளியலறைக்குச் சென்ற பிறகு குழந்தையை ஒரு பச்சை கட்டைப் பையில் கடத்தி சென்றார். இந்த சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்த, மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அந்த பெண்ஒருஆட்டோவில்ஏறிச் செல்லும் காட்சிகள்சிசிடிவிமேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து விசாரிக்க டி.எஸ்.பி கபிலன் தலைமையில் 3 தனிப்படைபோலீசாரைநியமித்துத்தேடும் பணியை முடுக்கிவிட்டிருந்தார் மாவட்டஎஸ்.பிரவளிப்பிரியா.

Advertisment

தொடர்ந்துராஜலட்சிமியிடம்நடத்தியவிசாரணையில்,கடைசியாககுழந்தையின் அடையாள எண் உள்ள அட்டை ஒன்று அந்தப் பெண் வாங்கிச் சென்றார் என்று கூறியுள்ளார். அந்த அடையாள எண் கொண்ட அட்டையை மருந்தகத்தில் தான் பயன்படுத்த முடியும் என்பதால் உடனேபோலீசார்மருந்தகத்தில் குவிந்திருந்த அடையாள அட்டைகளை ஆய்வு செய்தபோது அதில் எழுதி இருந்தசெல்போன்எண்ணை எடுத்து முகவரி பார்த்தபோது பட்டுக்கோட்டை முகவரி காட்டியுள்ளது. உடனே பட்டுக்கோட்டை டி.எஸ்.பிசெங்கமலக்கண்ணனிடம்தகவல் தெரிவிக்கப்பட்டது.டிஎஸ்பிடீம்சம்மந்தப்பட்டசெல்போன்எண்ணைப்பயன்படுத்தும் பெண்ணை அழைத்து விசாரித்த போது எனக்கும் குழந்தை திருட்டுக்கும்சம்பந்தமில்லைஎன்று கூறியுள்ளார். அப்போது குழந்தை திருடிச் சென்ற பெண்ணின்சிசிடிவிபடத்தைக்காட்டியபோது அந்த பெண்ணின் சேலை கலரைப் பார்த்தவுடன் இது என் தோழிவிஜிஎனத்தெரிவித்துள்ளார்.விஜிக்குகுழந்தை பிறந்திருப்பதாகசொன்னாங்கஎன்று சொல்லிக் கொண்டேவிஜியுடன்அந்தப் பெண் இருக்கும் படத்தையும் காட்டியுள்ளார்.

Advertisment

பட்டுக்கோட்டைபோலீசாருடன்தஞ்சைபோலீசாரும்இணைந்து விரைந்து சென்று பாலமுருகன் என்பவர் வீட்டிலிருந்த விஜிமற்றும் கடத்தி வரப்பட்ட குழந்தையை மீட்டனர். உடனேகுழந்தையைப்பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்துஆம்புலன்ஸ்மூலம் தஞ்சைக்கு அனுப்பி வைத்தனர்.விஜியைகைது செய்துள்ளனர்.

thanjai

விஜிபோலீசாரிடம்கூறும் போது, ''என்3 வதுகணவர்பாலமுருகன். (அவருக்கு நான்2 வதுமனைவி)பாலமுருகனுக்குகுழந்தை பெத்துக்கஆசைப்பட்டேன். ஆனால்கர்ப்பமாகல. அதனாலஅவரோடசொத்துகள் வேறு யாருக்காவதுபோய்விடுமோ என்ற கவலை எனக்கு.அதனாலகடந்த 10மாதமாகக்கர்ப்பமாக இருப்பது போல வயிற்றில்துணியைக்கட்டி நாடகமாடினேன். போன வாரம்பிரசவத்திற்காக தஞ்சாவூர் போறதாசொல்லிட்டுராசா மிராசுதார் மருத்துவமனைக்கு போனேன். அங்கே தான் யார் ஆதரவும் இல்லாமல்ராஜலட்சுமிதனியாகபிரசவமாகிதவிப்பதைப் பார்த்துநட்போட பழகி, கூட இருந்து கவனித்துக் கொண்டேன். வெள்ளிக்கிழமை ராஜலட்சுமிபாத்ரூம்போன நேரத்தில் குழந்தையைக் கட்டைப் பையில்வைத்துத் தூக்கிட்டு வந்து ஆட்டோவில்ஏறி புதுபஸ் ஸ்டாண்ட்போய் பட்டுக்கோட்டை வந்துட்டேன். எனக்கு குழந்தை பிறந்திருக்குனு எல்லார்கிட்டயும்சொல்லிட்டேன்.மெடிக்கல்லபேம்பர்ஸ் வாங்கும் போதுபோன் நம்பர்கேட்டாங்கஎன் நம்பர்கொடுத்தாமாட்டிக்குவோம்னுஎன் தோழிநம்பரைக்கொடுத்துவிட்டு வந்தேன்'' என்று கூறியுள்ளார்.

thanjai

குழந்தை திருடுபோய் 30 மணிநேரத்தில் மீட்கப்பட்டதால்போலீசாருக்குபாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மீட்கப்பட்ட குழந்தை குணசேகரன்-ராஜலட்சுமியிடம் ஒப்படைத்த போதுபோலீசாரின்காலில் விழுந்து நன்றி கூறியுள்ளனர்.