Skip to main content

''நான் திமுகவுக்கு போவதாக சொல்வது வதந்தி'' – மறுக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன்

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஜனவரி 30ந்தேதி அமமுக நிர்வாகிகளிடன் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அவர் தங்கியுள்ள தனியார் ஹோட்டலுக்கு வருகை தந்த அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகியான தங்க.தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

thangatamilselvan interview

 

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர், நான் திமுகவுக்கு போவதாக வரும் தகவல் பொய்யானவை. என் தந்தை திமுகவில் இருந்தார். கலைஞர் – எம்.ஜி.ஆர் மோதல் வந்தபோது, ஒரு நடிகரின் பின்னால் போகக்கூடாது என பேசியபோது, என் தந்தை எம்.ஜி.ஆர் பின்னால் நின்றார். 4 முறை ஒன்றிய செயலாளராக இருந்தவர். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுக உடைந்தபோது, ஜெயலலிதா பின்னால் செல்லவில்லை. அப்படிப்பட்ட நான் இப்போது காலத்தின் கோலத்தால் சின்னம்மா பின்னால் நிற்கிறேன், இரட்டை இலைக்காக வழக்கு தொடுத்துள்ளார் எங்கள் துணை பொதுச்செயலாளர், அதில் வெற்றி பெற்று இரட்டை இலையை பெறுவோம், என் சின்னம் என்றும் இரட்டை இலை தான் என்றார்.

 

 

தேர்தல் வந்தால் எல்லா கட்சியும் பிற கட்சியோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும், கூட்டணி அமைப்பதற்கான இறுதி நாளான்னு வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும். அதனால் இப்போது யார், எந்த கூட்டணி என்று சொல்ல முடியாது.

 

 

திமுக தலைவர் நடத்தும் கிராமசபா கூட்டம் என்பது, அவர் கட்சியின் சார்பில் நடத்துகிறார், அது அவர்கள் பிரச்சனை. நான் டிவியில் பார்த்தவரை அந்த கூட்டம் இயல்பாக நடக்காமல் செயற்கை தனமாக உள்ளது.

 

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜேக்டோ – ஜியோ அமைப்பினரை அழைத்து பேசி 9 கோரிக்கைகள் வைக்கிறார்களா 2வது நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர்கள், அதிகாரிகள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள், அவர்கள் தான் வெற்றியை தீர்மானிப்பவர்கள். திமுக, கம்யூனிஸ்ட், அமமுக தான் போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் எனச்சொல்வது சரியல்ல. போராட்டத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் சுயஅறிவு உள்ளது, அவர்கள் தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள்.

 

 

அமைச்சரவையில் ஊழல் நடக்கிறது என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் எனக்கேட்கிறிர்கள், உள்ளாட்சி துறை அமைச்சர் குடும்பம் தான் உள்ளாட்சிகளுக்கு அனுப்பப்படும் பிளீச்சிங் பவுடர் வாங்கி தருகிறது. அதில் பெரியளவில் ஊழல் நடந்து ள்ளது என்றார்.

 

 

தங்க தமிழ்ச்செல்வனின் பதில்கள் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசைக்கூட குத்துகிறது. ஆனால் திமுக தலைவர் பற்றிய கேள்விக்குயெல்லாம் சாப்டாகவே நழுவும் மீனாகவே பதில் தந்தார். இது அங்குயிருந்த அமமுகவினரையே குழப்பத்தில் ஆழ்த்தியது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.