Skip to main content

அமைச்சர் ஜெயக்குமாருக்கு வாய்க்கொழுப்பு அதிகம்! விளாசிய தங்கத்தமிழ்ச்செல்வன்!!

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

டிடிவி ஆதரவாளரான கரூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார். அப்பொழுது ஸ்டாலினிடம் செந்தில்பாலாஜி கூடியவிரைவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலரை தி.மு.க.வுக்கு அழைத்து வருகிறேன் என வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். 

 

thangatamilselvan about  jayakumar

 

இது சம்மந்தமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும், டிடிவி ஆதரவாளருமான தங்கத்தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது... 

 

செந்தில்பாலாஜி இங்கிருந்து போனதுனால அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அவர் தொகுதியில் உள்ள  ஆதரவாளர்களுடன் தான் தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறார். அதுலயும் பலரை காசு கொடுத்து கூட்டிட்டு போய் இருக்கிறாரே தவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து பெயர் சொல்லும் அளவிற்கு யாரும் போகவில்லை. அதுபோல் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொறுப்பாளர்களும் செந்தில் பாலாஜி பின்னாடி எல்லாம் போகமாட்டார்கள். தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் டிடிவி பக்கம்தான் இருப்பார்களே தவிர இனி யாரும் தி.மு.க.வுக்கு போகமாட்டார்கள் என்றவரிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது செந்தில்பாலாஜியை தொடர்ந்து கூடிய விரைவில் தினகரனும் தி.மு.க.வில் சேரப் போகிறார் என்று பேசியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, அம்மா மறைந்த பின்பு அ.தி.மு.க.வில் அமைச்சர்களுக்கு எல்லாம் துளிர்விட்டு போய்விட்டது. அங்கங்கே வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். அதுபோலதான் இந்த ஜெயக்குமாரும் எங்க துணைப் பொதுச்செயலாளரை தி.மு.கவுக்கு போகப்போகிறார் என்று சொல்லியிருக்கிறார். 

 

 

இந்த ஜெயக்குமாருக்கு வாய்க்கொழுப்பு அதிகம் அம்மா இருந்தப்ப ஓரங்கட்டி வைத்திருந்த ஜெயக்குமார் இப்ப பதவிக்கு வந்தபின் ஓவராக பேசி வருகிறார். இந்த ஜெயக்குமார் தொகுதியான ராயப்பேட்டை தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டாலும் ஜெயக்குமார் டெபாசிட் வாங்கமாட்டார். அது அவருக்கே தெரியும் அப்படியிருந்தும் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். இனிமேலாவது எங்க துணைப் பொதுச் செயலாளர் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்களும் ஜெயக்குமாரின் பல ரகசிய தகவல்களை அதிரடியாக வெளியிடுவோம் என்று கூறினார்! 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.