நெல்லை மாவட்டம் இசக்கி ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்கத்தமிழ் செல்வன், அவருடன் எம்.எல்.ஏ மாரியப்பன் என்கின்ற கென்னடி, சாத்தூர் சுப்ரமணியம், பெரியகுளம் கதிர்காமம், காப்புரெட்டிபட்டி பழனியப்பன் என மொத்தம் 7 எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்செல்வன் பேசுகையில்,
உதவி கேட்டு வந்த அப்பாவிப்பெண் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார், குழந்தை பிறந்திருக்கிறது. பிறப்பு சான்றிதழ் உள்ளது. அந்த பெண்ணின் தாயார் இருக்கிறார். அவரது அழுகுரல் ஆடியோவில் இருக்கிறது. எனவே இந்த ஆதாரங்களை வைத்து மரபணு சோதனை நடத்தி இது உண்மையா பொய்யா என தெரியப்படுத்தும் கடமை எடப்பாடி அரசுக்கு இருக்கிறது எனக்கூறினார்.