Skip to main content

தாமிரபரணியில் வெள்ளம்... மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்! (படங்கள்)

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் அம்பை பகுதி மலையின் சுமார் 6500 அடி உயரத்திலிருக்கும் அகத்தியர் மெட்டு மலைப்பள்ளத்தாக்கின் பின்புறமிருக்கும் சதுப்பு நிலக்காடுகள் எப்போதும் நீர்ப்பிடிப்புகளைக் கொண்டவை. கோடைகாலம், மழைக்காலம் என்றில்லாமல் மிகவும் உயர் குளிர்நிலையிலிருப்பதால், அந்தச் சதுப்பு நிலக்காடுகள் வருடம் முழுக்க தண்ணீரை உள்வாங்கி வெளியேற்றும் பகுதி. இதிலிருந்து உற்பத்தியாகும் தண்ணீர்தான் அருவியாகத் தரையிறங்கி பாபநாசம், மணிமுத்தாறு வழியாகப் பாய்வதால் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியாகிறது.


கோடைக்காலத்தில் சுமாரான மழை பெய்தாலும் நீர்பிடிப்பு வெள்ளமாக வெளியேறும், அதுவே மழைக்காலம் என்றால் தாமிரபரணி பொங்கிவிடும்.
 

கடந்த அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்த உடனேயே வறண்டிருந்த பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. நேற்று முன்தினம் அடைமழையாய் நீர்பிடிப்பு என்றில்லாமல் மாவட்டம் முழுவதும் 19 செ.மீ. மழை பெய்ததால் மேற்குத் தொடர்ச்சி மழையிலுள்ள குற்றாலம் நகரின் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. மிகப்பெரிய அணையான மணிமுத்தாறு தவிர பாபநாசம் முழுக்கொள்ளளவான 141.65 அடியை எட்டியது. சேர்வலாறின் அணைமட்டம் 148.16 என கொள்ளளவானது. மணிமுத்தாறு 92.40 அடியானது.
 

மேலும் அணைகளுக்கு வரும் தண்ணீர் இங்கிருந்து, உபரி நீர் 9280 கனஅடி வெளியேற்றப்பட்டதால் அம்பை, பாபநாசம், கல்லிடைக்குறிச்சிப் பகுதிகளில் வெள்ளமாக கரை புரண்டது. மேலும் மாவட்டத்தின் பச்சையாறு, ராமநதி, கடனாநதி போன்ற அணைகள் நிரம்பியதால் அதன் உபரி நீர் தனி ரூட்டில் பயணித்து தாமிரபரணி ஓடும் முக்கடலான முக்கூடலில் சங்கமித்து மொத்த வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்கிருந்து நிமிடத்திற்கு பத்தாயிரம் கன அடிகளுக்கும் மேற்பட்ட நீர், வெள்ளமாக நெல்லை வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. வீணாகச் ஸ்ரீவைகுண்டம் வழியாகக் கடலில் கலக்கிறது.
 

இதனால் பாபநாசம் காரையாறு முண்டன்துரை செல்லும் பாலம் துண்டிக்கப்பட்டது. இவைகள் வெள்ளத்தால் மூழ்கின. நெல்லை கொக்கிரகுளம் பகுதியின் தைப்பூச மண்டபத்தின் வாசல்படிகளைத் தொட்டபடி வெள்ளம் எட்ட, ஆற்றிலிருக்கும் குருக்குத்துறை, கருப்பந்துறை சிந்துப்பூந்துறை, மணிமுத்தீஸ்வரம், படித்துறைகள் உட்பட அந்தப்பகுதியின் 10- க்கும் மேற்பட்ட கல்மண்டபங்கள் வெள்ளத்தால் மூழ்கின. மேலும் குருக்குத் துறையின் முருகன் கோவில் மண்டபம் வெள்ளம் காரணமாகத் துண்டிக்கப்பட்டதால் கோவில் மண்டபம், மற்றும் கோபுரத்தைத் தொட்டபடி வெள்ளநீர் செல்வதால் பக்தர்களால் ஆலயம் செல்ல முடியவில்லை.
 

இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் பகுதியில் ஒரே நாள் இரவில் 19 செ.மீ. மழை கொட்டித்தீர்த்ததால் அந்தப் பகுதியிலுள்ள விஜய அச்சம்பாடு கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்து வீடுகளைச் சுற்றிக் கொண்டதால் மக்கள் பாதுகாப்பாக வெளியுற்றப்பட்டனர். தூத்துக்குடியின், திரு.வி.க.நகர், அமுதா நகர், எம்.ஜி.ஆர்.நகர், மினிசகாயபுரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கைகளும் முடக்கப்பட்டன.



 

சார்ந்த செய்திகள்

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

பாஜகவில் சேர்ந்த தமிழிசை; தேர்தலில் மீண்டும் வாய்ப்பா?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Tamilisai joined BJP; A SEAT again?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் தமிழிசைக்கு பாஜகவில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி வாய்ப்பளித்தால் மீண்டும் தூத்துக்குடியில் தமிழிசை நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே திமுகவில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.