Skip to main content

வயிற்றிலும், சோற்றிலும் கை வைத்து விட்டு முன்னேற்றம் பற்றி பேசுகிறார்கள்!  தமிமுன் அன்சாரி கண்டன பேச்சு!

Published on 29/01/2019 | Edited on 29/01/2019
THAMIMUN ANSARI


 

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில், ஹைட்ரோ கார்பன் எடுப்பு திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் இரவு நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி.
 

அப்போது அவர்கள் முன் பேசிய தமிமுன் அன்சாரி, 
 

''தங்கள் மண்ணில் மீத்தேன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று நியுயார்க் நகர மேயர் அறிவித்தார். அவருக்கு தன் மக்களின் மீது கரிசனம் இருந்தது. இது அமெரிக்கர்களின்  நிலைபாடு.

 
ஆனால் இங்கே நமது மத்திய அரசும், பிரதமரும் நமது தஞ்சை சமவெளி மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலைப்படவில்லை. தென்னிந்தியாவுக்கு சோறு போடும் டெல்டா மாவட்ட மண்ணை சூறையாட துடிக்கிறார்கள்.
 

 நெடுவாசல், மன்னார்குடி, கும்பகோணம், மயிலாடுதுறை என அவர்கள் முகம் காட்டிய போதெல்லாம் போராட்டங்கள் மூலம் மக்கள் அதை முறியடித்தார்கள்.
 

 இப்போது டெல்டா மாவட்டங்களின் 40% விவசாய நிலத்தை மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுப்புக்காக அழிக்க நினைக்கிறார்கள்.
 

THAMIMUN ANSARI


விவசாய நிலம் அழிந்தால், நெல் உற்பத்தி குறையும். உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும். உணவுப் பொருட்களின் விலைவாசி உயரும். பசி, பட்டினி பெருகும். சமூகவியல் சிக்கல்கள் அதிகரிக்கும்.
 

 இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்று ஏமாற்றுகிறார்கள். வயிற்றிலும், சோற்றிலும் கை வைத்து விட்டு முன்னேற்றம் பற்றி பேசுகிறார்கள்.
 

திருக்காரவாசல், தலைஞாயிறு, கச்சனம், திருக்குவளை, கட்டிமேடு, கரியாப்பட்டினம் என பல விவசாய கிராமங்களை பாழ்படுத்த மத்திய அரசு, வேதாந்தா நிறுவனத்தோடு மீத்தேன் எடுக்க போட்டுள்ள ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். இத்திட்டங்கள் எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம்.
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சுதந்திர தின உரையின்போது, விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்திற்கும் நிலத்தை அளிக்க மாட்டோம் என சூளுரைத்தார். அந்த வழியில் தமிழக அமைச்சரவை இவ்விஷயத்தில் கொள்கை முடிவெடுக்க வேண்டும்.

 

THAMIMUN ANSARI


எங்கள் மண்ணையும், விவசாயத்தையும் பாழ்ப்படுத்த அனுமதிக்க மாட்டோம். விவசாய அறுவடை நடைபெறும் இந்நிலையிலும் கூட, வேலைக்குப் போய் விட்டு, மாலை நேரப் போராட்டத்தில் இக்கிராம மக்கள் ஈடுபட்டிருப்பது நம்பிக்கை ஊட்டுகிறது.
 

காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தை தொடக்கியபோது, ஆரம்பத்தில் சில நூறு பேரே இணைந்தனர். அது பின்னர் மக்கள் போராட்டங்களாக, வெவ்வேறு வடிவங்களில் மாறியது.
 

 அது போல இம்மக்களின் போராட்டமும் வெல்லும். பி.ஆர்.பாண்டியனோடு, மஜகவும் இணைந்து உங்களோடு ஜனநாயக வழியில் போராடுவோம்'' என்றார். 
 

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், ''இப்போராட்ட களத்துக்கு வந்த முதல் அரசியல் தலைவர் தமிமுன் அன்சாரிதான். சட்டமன்றத்தில் இடதுசாரிகள் இல்லாத குறையை, இவர் போக்கி வருகிறார். தொடர்ந்து இப்போராட்டம் விரிவடையும்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.