Skip to main content

இந்த உறவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் பாஜககூட... -தம்பிதுரை

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

 

thambidurai

 

திண்டுக்கல், வேடசந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி. தம்பிதுரை இவ்வாறு கூறியுள்ளார்.


எங்களின் சஸ்பெண்ட் ஆடரை ரத்துசெய்ய வேண்டுமென்று சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தேன். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பி.ஜி. ஜனதா தளம், கம்யூனிஸ்ட் அதேபோல பி.ஜே.பி. எங்களிடம் உறவு வேண்டும், உறவு வேண்டும் என்று சொல்கிறார்களே இந்த உறவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இவர்கள்கூட, ஒரு வார்த்தை, ஒரு உறுப்பினர்கூட எழுந்து, சபாநாயகர் அவர்கள் திமுக, அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததை தாங்கள் விலக்கிக்கொள்ள வேண்டும். என இந்த பா.ஜ.க. உறுப்பினர்கள் ஒருவர்கூட கேட்கவில்லை என்பது எனக்கு மனவருத்தத்தை அளிக்கிறது. நான் எதும் பேசினால், தவறாக பேசுவதாக நினைக்கிறீர்கள். நான் பேசுவது எங்கள் உதவியை மட்டும் நாடிக்கொண்டு அதேநேரத்தில் உறவுக்கும் கைகொடுத்தால்தானே எங்களுக்கு நன்றாக இருக்கும். அந்த நிலைமை இல்லாததை அன்று அவையில் நான் பார்த்தேன், இரண்டு நாட்களாக. எனக்கு மனம் வேதனைபட்டது.   பல நேரங்களில் பாஜகவின் வேண்டுகோளை ஏற்று, அவர்களுக்கு ஆதரவும் அளித்துள்ளோம்.

 

 

சார்ந்த செய்திகள்