இந்தியாவில் கரோனாவுக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.
ADVERTISEMENT
இந்த நிலையில் சென்னையில் மூன்றாவது மையமாக தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனை, பூந்தமல்லி சுகாதார மையத்தை தொடர்ந்து தாம்பரத்திலும் கரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
கரோனா அச்சம் காரணமாக, பயணிகள் வருகை குறைவால் சென்னையில் 10- வது நாளாக விமான சேவை பாதிக்கக்ப்பட்டுள்ளது. கரோனாவால் வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்து செல்லும் 18 விமான சேவைகள் இன்றும் ரத்தாகின. கடந்த 10 நாட்களில் 177 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Show comments