கடலூரில் வானவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் எம்.புதூரில் உள்ள வானவேடிக்கைபட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் ஏற்பட்ட இந்த விபத்தில் ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கொட்டகைக்குஉள்ளே உள்ள பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.