/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/firee-ni.jpg)
சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர் சுங்கச்சாவடி அருகே டயர் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இந்த குடோனில், டயர்கள், எண்ணெய் டிரம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த இடத்தில் திடீரென பயங்கர தீ பற்றி எரிந்துள்ளது. இங்கு ஏற்பட்ட தீ மளமளவென பரவி அந்த பகுதி முழுவதும் பல அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்து மேலெழும்பி வருகிறது. மேலும், இந்த பகுதியில் மாநகர சுகாதார மருத்துவமனை இயங்கி வருவதால், அங்கு இருக்கக்கூடிய நோயாளிகள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இந்த தீ விபத்து சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், இங்கு தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)