Skip to main content

திமுக வேட்பாளரின் கணவர் கன்னத்தில் பளார்! -காவல்துறையினர் கண்முன்னே ஆளும்கட்சியினர் டென்ஷன்!

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

Tension of the ruling party before the eyes of the police!

 

வேட்புமனு பரிசீலனை நாளில் வேட்பாளரிலிருந்து காவல்துறையினர் வரை அனைவரும் டென்ஷனாகவே இருப்பார்கள். சிவகாசி மாநகராட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.  

 

சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களை   இன்று சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் பரிசீலித்தனர். பரிசீலனை நடைபெறும் இடத்துக்கு வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், திருத்தங்கல் 20-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொன்மாடத்தியின் கணவர் கருப்பசாமி, திருத்தங்கல் நகர திமுக பொறுப்பாளர் உதயசூரியன் உள்ளிட்ட ஆளும்கட்சி நிர்வாகிகள் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் இடத்தை நோக்கி முன்னேறினர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த சிவகாசி டவுண் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் உள்ளிட்ட காவல்துறையினரிடம் உதயசூரியனும் கருப்பசாமியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இன்ஸ்பெக்டர் சுபக்குமார்  ‘வேட்பாளர்களை மட்டுமே அனுமதிப்போம்..’ என்று கூற, வாக்குவாதம் தொடர்ந்தது.

 

இன்ஸ்பெக்டர் சுபக்குமாரிடம் உதயசூரியன் “நீங்கதான் கையைத் தள்ளிவிட்டீங்கள்ல. உங்ககிட்ட என்ன பேச வேண்டியது இருக்கு? போங்க சார் நீங்க!” என்று குரலை உயர்த்திப் பேச, சுபக்குமாரோ “நான் தள்ளிவிடல..” என்று மறுத்தார். அப்போது கருப்பசாமி ஏதோ சொல்ல, ‘பளார் பளார்’ என்று அவருடைய கன்னத்தில் மாறிமாறி அறைவிட்ட உதயசூரியன், “நான்தான் பேசிட்டு இருக்கேன்ல. நீ ஏன் பேசுற?” என்று எகிறினார். அப்போது கட்சி நிர்வாகிகளில் ஒருவர் “காலைல இருந்து நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு..” என்று அங்கலாய்த்தார். நடந்தை கவனித்த  இன்ஸ்பெக்டர் சுபக்குமாரோ, “நீங்க டென்ஷன் ஆகி எங்கள ஏன் டென்ஷன் ஆக்குறீங்க?” என்று புலம்பினார்.  

 

தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள்ள 20-வது வார்டில் போட்டியிடும் பொன்மாடத்தியின் கணவர் கருப்பசாமியை, இன்னொரு சமுதாயத்தவரான உதயசூரியன் அடித்ததால், இச்சம்பவம் சாதி ரீதியான விமர்சனத்துக்கு வழிவகுத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.