Skip to main content

பதற்றமான பகுதிகள்... தனியாக சைக்கிளில் நைட் ரவுண்ட்ஸ் போகும் எஸ்.பி!!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

நெல்லைப் பக்கம் உள்ள முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம் பகுதிகளில் கடந்த 2012, 2013 ஆண்டுகளில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு தரப்பிலுமாக 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக கடந்த செப் 13, 15 ஆகிய தேதிகளில் கீழச்செவல் நயினார்குளம் சங்கரசுப்பிரமணியனும், கோபால சமுத்திரத்தின் மாரியப்பன் இருவரும் பழிக்குப் பழியாகத் தலை துண்டிக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டனர்.

 

இதனால் இரு பிரிவினருக்கிடையே பதற்றம் பரவியதுடன் முன்னீர்பள்ளம், கோபால சமுத்திரம் கீழச்செவல் உள்ளிட்ட கிராமங்களில் பீதி பரவியது. இதுதொடர்பாக இரண்டு தரப்பிலும் 12 பேர் என 24 பேர் கைது செய்து செய்யப்பட்டனர். பதற்றம் பரவிய பகுதிகளில் மோதல் ஏற்படாமல் தடுக்க நெல்லை மற்றும் வெளிமாவட்டப் போலீசார் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டனர்.

 

மேலும் சம்பவம் நடக்காமலிருக்க நெல்லை மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணன் கடந்த இரண்டு நாட்களாகக் கோபால சமுத்திரம், கீழச்செவல் பகுதிகளில் இரவு நேரம் சைக்கிளில் சென்று ஆய்வு செய்கிறார். தினமும் துணிச்சலாக எஸ்.பி. தனியாகவே செல்கிறார். போலீசார் பீட் போடப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து பணியிலிருக்கிறார்களா என டைரியில் கையெழுத்திடுகிறார். அது சமயம் கோபால சமுத்திரம் பகுதியின் மூதாட்டி ஒருவர் எஸ்.பி.யிடம் விவகாரத்தைச் சொல்ல, உடனே அவரோடு போலீசாரை அனுப்பி அந்த மூதாட்டி வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் நடந்த விவகாரத்தை மேலும் மூளாமல் தடுத்துத் தீர்த்து வைக்கிறார். இதுபோன்று பல கிராமங்களில் எஸ்.பி.யே பகல் இரவு வேலைகளில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததுடன் பதற்றப்பகுதி கிராம மக்கள் நிம்மதியாகவும் உள்ளனராம்.

 

காவலைப் பலப்படுத்தியுள்ளோம். நான் எந்த நேரத்திலும் ஆய்வுக்கு வருவேன் என்பதால். காவலர்களும் விழிப்புடன் செயல்படுகின்றனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்கிறார் எஸ்.பி. மணிவண்ணன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.