Tenkasi will have a school holiday tomorrow

தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் வாக்காளர் பெயர் சேர்ப்புமுகாம் நடைபெற இருக்கின்ற நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழைபொழிந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 20 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாகபள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதை ஈடு செய்யும் வகையில் நாளை (23/11/2024-சனிக்கிழமை) பள்ளி வேலைநாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாக்காளர் முகாம்கள் நடைபெற உள்ளதால் வேலை நாளாக அறிவிக்கப்பட்ட நாளைய தினத்தைவிடுமுறை நாளாகமாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.