Skip to main content

மாணவிகளை ஏமாற்றிய டிக் டாக் காதல் மன்னன்!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

"டிக் டாக்கினை கொண்டு, வீடியோ எடுத்து என்னைப் போன்ற பல மாணவிகளை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றான். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தென்காசி மாவட்ட எஸ்.பி.க்கு ஆன்லைனில் புகார் அனுப்பப்பட 19 வயதே ஆன இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 
தென்காசி மாவட்டம் ஆனைக்குளம் அருணாசலப்புரம் வடக்கு வீதியினை சேர்ந்த செல்வராஜின் மகன் கண்ணன். 19 வயதே ஆன இவன் கண்ணைக்கவரும் வண்ண ஆடைகளை உடுத்தி நாளொரு வண்ணமாக kannansnkr எனும் ஐ.டி.யில் 947 வீடியோக்களைப் பதிவிட்டு டிக் டாக்கில் காதல் மன்னனாக பிரபலம். டிக் டாக்கில் இந்த காதல் மன்னனை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 4 லட்சம் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

tenkasi tiktok incident one person arrested police


இவனை நேற்று (02/03/2020) கைது செய்த சேர்ந்தமரம் காவல்துறையினர், "சுரண்டை, வீரசிகாமணி மற்றும் சேர்ந்தமரம் போன்ற பகுதிகளில் சாலையோரம் நடந்துவரும் பள்ளி, கல்லூரி மாணவிகள், மற்றும் பொதுமக்களை அவர்கள் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டதும், பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததுமாக" வழக்கினைப் பதிவு செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

 
"எனக்கும் அவனுக்கும் டிக் டாக் மூலம் தான் பழக்கம் ஏற்பட்டது. அவனுடைய வீடியோவினைப் பார்த்து லைக் போட, அதனைக் கண்டு அவன் என்னுடைய இன்பாக்ஸிற்கு வந்து மெஜேஜ் அனுப்ப நெருங்கி பழக நேரிட்டது. இதனால் அவனுடன் வீடியோ சாட்டும் செய்ய வேண்டியதாயிற்று. அவன் அந்த வீடியோவினை பதிவு செய்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தான். பணம் தரவில்லையென்றால் வீடியோவினை வெளியிடுவதாகவும் மிரட்டினான். 

இதற்காக ரூ.2 லட்சம் வரை அவனிடம் கொடுத்துள்ளேன். நான் தான் இப்படியென்றால் என்னுடைய தோழிகளுக்கும் இதே நிலைமைதான். அத்தனை பேரிடமும் காதல் செய்வதாக நடித்து வீடியோ எடுத்து லட்சக்கணக்கான ரூபாயை மிரட்டியே கறந்துள்ளான். விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென," என குற்றலாம் பகுதியிலுள்ள கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் மாவட்ட எஸ்.பி.க்கு புகார் அனுப்ப, அது அப்படியே எங்களுக்கும் பார்வர்டு ஆக எங்களுக்கும் வந்தது. விசாரித்து அவனை கைது செய்தோம். உண்மையில் அவன் கிரிமினலான காதல் மன்னன் தான்.!!" என்கின்றனர் சேர்ந்தமரம் காவல்துறையினர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.