Skip to main content

முரண்டு பிடித்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கொலை! விசாரணை வளையத்தில் பெற்றோர்!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
tenkasi

 

தென்காசி மாவட்டத்தின், சங்கரன்கோவில் சப்-டிவிசனில் வருவது சின்னக் கோவிலான்குளம். அங்கே குடியிருக்கும் குட்டிராஜ் என்பவரது மகன் செந்தில் குமார்(31) திருமணமாகாதவர்.

செந்தில்குமார் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றாலும் சைக்கோ. தனக்கு ஏதாவது பிறர் இடர் செய்தால் மூர்க்கமாகிவிடுவது இவரது இயல்பு. இதற்கு சிகிச்சையளிப்பதற்காக இவரது பெற்றோர்கள் கடந்த 6 வருடங்களாக வெளியிலிருந்தவாறே சிகிச்சையை மேற்கொண்டிருக்கின்றனர். இதன் பின் காப்பகத்திலிருந்து அண்மையில்தான் கிராமத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள் பெற்றோர்.

வீடு வந்த பின்பு மனநலம் பாதிப்பு காரணமாக இரவில் வீட்டார் யாரையும் தூங்க விடாமல் கூச்சலான சப்தத்தை எழுப்பியவாறிருப்பாராம். தவிர அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே ஓடிவிடும் செந்தில்குமாரை மற்றவர்கள் பிடித்துக்கொண்டு வருமளவுக்குக் கட்டுப்பாடில்லாமல் திரிந்திருக்கிறார். இதனால் அவரை நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க முடிவு செய்திருந்தனர். இதனிடையே பக்கத்திலுள்ளவரின் செல்போன் காணாமல் போனதை செந்தில்குமார் எடுத்திருக்கலாம் என்று சந்தேகத்தில் அவனை தேடியிருக்கிறார்கள், அவர் ஒரு வீட்டில் ஒளிந்திருக்கிறார். அவரை அழைத்து வர அவனது தந்தை மற்றும் உறவினர் முயன்றபோது வர மறுத்த அவர், அந்த வீட்டுக் கண்ணாடியை உடைத்திருக்கிறார். அவரை ஆட்டோ ஒன்றில் ஏற்ற முற்பட்டபோது முரண்டு பிடித்தவர் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து டிவைரை தாக்க முயல,  இதனால் ஆத்திரமான தந்தையும், உறவினரும் சேர்ந்து செந்தில்குமாரை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அடித்து உதைத்திருக்கிறார்கள். அதே சமயம் செல்போன் சம்பந்தமாகப் போலீசில் புகாரானதும், விசாரித்த போலீசார் அவரை சிகிச்சைக்காக காப்பகத்தில் சேர்க்க அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர்.

தந்தையும், உறவினரும் அவரை சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயன்றபோது முரண்டு பிடித்து ஆத்திரமான செந்தில்குமார் அவர்களை தாக்க முற்பட்டிருக்கிறான். இதனால் ஆத்திரமான அவரது தந்தையும், உறவினரும் அவரைக் கண்ட்ரோல் செய்வதற்காக அருகிலுள்ள ஆலமரத்தில் கட்டி கட்டையால் சரமாரியாக அடித்திருக்கிறார்களாம். இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பனவடலிசத்திரம் போலீசார் கொலை சம்பவம் எப்படி நடந்தது என்று செந்தில்குமாரின் தந்தை குட்டிராஜையும், உறவினர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

புத்தி சுவாதீனம் இல்லாதவரை கையாளும் வழி தெரியாமல், கொடிய கொலைபாதகச் செயலை இரக்கமில்லாமல் நடத்தியது பஞ்சமாபாதகம் என்கிறது மனுதர்மம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

சாதுரியமாகச் செயல்பட்ட முதிய தம்பதியினர்; வீட்டிற்குச் சென்று பாராட்டிய ரயில்வே அதிகாரி!

Published on 01/03/2024 | Edited on 02/03/2024
An elderly couple who acted astutely Railway officer who went home and appreciated

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம், 'எஸ்' - வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி (25.02.2024) நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த லாரி நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா - வடக்குத்தியாள் என்ற தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்துகொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர். அதன் பின்னர் தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

மேலும் இது குறித்து உடனடியாகத் தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். அதே சமயம் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீரச் செயலைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27 ஆம் தேதி (27.2.2024) தலைமைச் செயலகத்தில் சண்முகையா - வடக்குத்தியாள் அத்தம்பதியரின் வீரதீரச் செயலை பாராட்டி, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வெகுமதியாக வழங்கி பாராட்டினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டதை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு அந்த வழியாக வந்த இரயிலை ‘டார்ச்’ லைட் சைகையால் நிறுத்தி, நிகழவிருந்த விபத்தைத் தடுத்த சண்முகையா – வடக்குத்தியாள் இணையரின் செயலுக்கு எனது பாராட்டுகள்!. எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

An elderly couple who acted astutely Railway officer who went home and appreciated

இந்நிலையில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா இந்த ரயில் விபத்தை தவிர்த்த செங்கோட்டையைச் சேர்ந்த சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியரை புளியரையிலுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். அதனைத் தொடர்ந்து பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நடந்த பாராட்டு விழாவில் இத்தம்பதியருக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கி சரத் ஸ்ரீவத்சவா கவுரவித்தார். இந்நிகழ்வில் மதுரை கோட்ட ரயில்வே முதுநிலை பொறியாளர் எம். பிரவீனா, கோட்ட ஊழியர்கள் நல அதிகாரி டி. சங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.