Skip to main content

சாக்கில் கட்டி வீசப்பட்ட பாட்டியும் பேத்தியும்! - தென்காசியில் பரபரப்பு!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

tenkasi district incident police investigation

தென்காசி மாவட்டம், கீழப்புலியூரில் குடியிருப்பவர் கோமதியம்மாள் (வயது 55). இவரது மகள் சீதாவை அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கிறார். முருகன் சீதா தம்பதியருக்கு மூன்று வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் உத்தரா என்ற மகளும் உள்ளனர். மருமகன் முருகன் ராணுவத்தின் காஷ்மீர் பகுதியில் பணிபுரிந்து வருகிறார். அதன் காரணமாக கோமதியம்மாள் தன் மகள் சீதா மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒன்றாகவே குடியிருந்து வருகிறார்.

 

tenkasi district incident police investigation

 

இந்த நிலையில், தன் மகளுடன் இருக்கும் கோமதியம்மாள் தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு தனது சொந்தக்காரர்களுக்கு வட்டிக்குக் கொடுத்து வந்திருக்கிறார். இந்தச் சூழலில், கடந்த ஜனவரி 12- ஆம் தேதி அன்று காலை கோமதியம்மாள் பணம் வாங்கி வருவதாகத் தன் மகள் சீதாவிடம் சொல்லி விட்டுத் தன் ஒன்றரை வயதுப் பேத்தி உத்தராவையும் அழைத்துக் கொண்டு போனவர் பொழுதாகியும் வீடு திரும்பவில்லையாம்.

 

tenkasi district incident police investigation

 

இதையடுத்து, உறவினர்கள் பாட்டியையும் பேத்தியையும் பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் போகவே தென்காசி காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் கொடுத்துள்ளனர். அது விசாரணையில் உள்ள நிலையில், ராணுவத்தில் இருக்கும் முருகனும் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

 

tenkasi district incident police investigation

 

இந்த நிலையில் குற்றாலம் காவல் லிமிட்டில் வருகிற மத்தளம் பாறையின் முத்துமாலைக் காட்டுப் பகுதி சாலையின் புதரிலிருந்து அழுகிய வாடை வரவே, தகவல் அறிந்த குற்றாலம் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் ஸ்பாட்டிற்கு வந்தனர். புதரிலிருந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்ததில் அதில் வயதான பெண், ஒரு குழந்தை என இருவரது அழுகிய உடல் இருப்பதைக் கண்டு உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்ததில் அது காணாமல் போன கோமதியம்மாளும், பேத்தி உத்தரா என்றும் தெரிய வர பதை பதைப்பில் உறவினர்கள் கதறினர்.

 

tenkasi district incident police investigation

 

இது குறித்து விசாரணை நடத்திய குற்றாலம் காவல் நிலைய போலீசார் கோமதியம்மாளை அறிந்தவர்களில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வட்டிக்குப் பணம் கொடுக்கல், வாங்கலில் நடந்த சம்பவமாகத் தெரிகிறது. பேத்தியையும், பாட்டியையும் கொலை செய்து வேறு எங்கோ மறைத்து வைத்திருந்து விட்டு சாக்கு மூட்டையில் இங்கே கொண்டு வந்து போடப்பட்டது போன்று தெரிகிறது என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. விசாரணை பல கோணத்தில் போகிறது என்கிறார்கள்.

 

பாட்டியும், ஒன்றரை வயது பேத்தியும் கொலை செய்யப்பட்டது தென்காசி வட்டாரத்தில் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.