Skip to main content

டென்டரில் கோடிக்கணக்கில் சுருட்டிய எஸ்.பி.வேலுமணி பினாமிகள்!-அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் புகார்!!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018

 

arappor iyakkam

 

அறப்போர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் " லஞ்ச ஒழிப்பு துறைக்கு இன்று கொடுப்பட்டுள்ள  புகாரில் அமைச்சர்  எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனங்களுக்கு கோவை மற்றும் சென்னை மாநகராட்சியில் அதிக டென்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  2014 ஜூன் முதல் 2015 நவம்பர் வரை கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சுற்று சுவர் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல், போன்றவைகளுக்காக கிட்டத்தட்ட 19 டென்டர்கள் விடப்பட்டது. அந்த 19 டென்டர்களுக்கும் மொத்தம் மதிப்பு  கிட்டத்தட்ட 6 கொடியே 50 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் என்றும். இந்த 19 டெண்டர்களில் அதிகபட்ச டென்டர்கள் கே.சந்திரபிரகாஷ் என்பவரின் கே.சி.பி என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிட்டேட் என்ற எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த டெண்டர் கோருபவர்களில் கே.சந்திரசேகர், ராபர்ட் ராஜா என்ற இருவர்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார்கள். இந்த இரண்டு பேரில் யாரேனும் ஒருவருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் ஜூன் 2014-லிருந்து நவம்பர் 2015 வரை  அந்த கால இடைவெளியில் மொத்தம் 38 டென்டர்கள் கோரப்பட்டுள்ளது. இந்த டென்டர்களும் வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்ஜர் என்ற எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனமும், கே.சந்திரபிரகாஷின் கே.சி.பி எஞ்சினியர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமும் மட்டுமே பங்கு பெற்று இருக்கிறது. அதிலும் வரதன்  இன்ஃப்ராஸ்ட்ரக்ஜர் நிறுவனத்திற்கு  அதிக டெண்டர்களை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2015 ஜனவரி முதல் அக்டோபர் வரை கோவை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 131 டென்டர்களில்  கே.சி.பி என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிட்டேட் நிறுவனத்திற்கு அதிகபட்ச டென்டர்களை கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் எஸ்.பி பில்டர்ஸ் எனப்படும் எஸ்.பி மணியின் பினாமி நிறுவனங்களே டென்டர் கோருதலில் இடம் பெற்று இருக்கிறது. இந்த 131 டென்டர்களின் மொத்த மதிப்பு 52 கொடியே  99லட்சத்து  31 ஆயிரம் ரூபாய் ஆகும்.

 

arappor iyakkam

 

அதேபோல் சென்னை மாநகராட்சியில் ஜனவரி 2018 முதல் மே 2018 வரை விடுக்கப்பட்ட டென்டர்களில் அர்பன் கம்யூனிட்டி ஹெல்ப் சென்டர் யு.பி.ஹெச்.சி எனப்படும் பணிசேவை தொடர்பான டென்டர்களிலும் எஸ்.பி வேலுமணியின் வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்ஜர் நிறுவனத்திற்கே டென்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த  டென்டர்களிலும் கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மொத்த டென்டர்களில் 88 சதவிகிதம்  வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்ஜர் எனும் எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனத்திற்கு சென்று சேர்ந்துள்ளது.மேலும் இந்த டென்டர்களில் கே.சி.பி என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிட்டேட், வரதன்  இன்ஃப்ரா ஸ்ட்ரக்ஜர், எஸ்.பி பில்டர்ஸ் நிறுவனங்களுக்கும் டென்டர் தரவேண்டும் என்பதற்காகவே  சில நிபந்தனைகளும் மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது ஒரு டென்டர் கோரும் நிறுவனத்தின் கடைசி மூன்றாண்டின் நிதிநிலையை டென்டர் விதிமுறை பொறுத்தே கவனத்திற்கு  டென்டர் கொடுக்கப்படும் . ஆனால் இது போன்ற விதிமுறைகளை தங்கள் வசதிக்காக மாற்றியமைத்து அந்த நிறுவனங்களுக்கு டென்டர்கள் கிடைக்க முறைகேடுகள் நடந்துள்ளதாக  கூறப்படுகிறது. 

 

இதன் மூலம் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாயை எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனம் சம்பாரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.