Skip to main content

மாணவியை மயக்கி கர்ப்பமாக்கிய கோவில் பூசாரி... புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டதில் அவளது தாயும் சகோதரியும் விசாரித்திருக்கிறார்கள். அது சமயம் அவள் 6 மாதம் கர்ப்பம் என்று தெரிய வர அதிர்ச்சியாகியுள்ளனர். இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. குறைபிரசவம் என்பதால் அந்தக் குழந்தையை மாணவியின் சகோதரி வீட்டில் புதைத்தனர். இது குறித்த தகவல் மாவட்ட எஸ்.பி.க்கு தெரியவர அவரது உத்தரவின்படி புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

 Temple priest who seduces student... shocking incident in tutucorin

 

இதில் அதே பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரியும், டி.வி.மெக்கானிக் ராஜூ (48) என்பவரும் அந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிக் கர்ப்பமாக்கியது தெரியவர அவர்களிருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விமலா கைது செய்தார்.

விசாரணையில் டி.வி.மெக்கானிக் ராஜூவின் மனைவியும் மகளும் வேலை நிமித்தம் வெளியே வென்று விடுவர். வீட்டில் ராஜூ மட்டும் தனியே இருப்பார். ஏழை மாணவியின் தந்தைக்கோ உடல் நலம் பாதிப்பு. தாய் கூலி வேலைக்குப் போய்விடுவார். வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ராஜூ அவளை தன் வீட்டிற்கு டி.வி. பார்க்க வருமாறு அழைத்து ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்தது மகளிர் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

 

 Temple priest who seduces student... shocking incident in tutucorin

 

பரபரப்பான கட்டத்தில் சகோதரி வீட்டில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைப் போலீசார் தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் முன்னிலையில் தோண்டி எடுத்தனர்.

பாலியல் பலாத்காரச் செயலால் அப்பாவி 16 வயது மாணவி கர்ப்பமாக்கப்பட்ட கொடூரமும் நடந்தேறியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.